Posts

நாட்டை விரைவில் சிக்கலிருந்து மீட்டெடுக்க முடியும் : பிரதமர் நம்பிக்கை!

Image
  நாட்டை விரைவில் சிக்கலிருந்து மீட்டெடுக்க முடியும் : பிரதமர் நம்பிக்கை! ஐ.எம்.எப். ஊடாக மீண்டும் சர்வதேசத்தின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் நாட்டை விரைவில் சிக்கலிருந்து மீட்டெடுக்க முடியும் என்றும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று(வெள்ளிக்கிழமை) ஆற்றிய உரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “கடந்தாண்டு எமது அரசாங்கம் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்தது. எமது நாட்டு மக்களும் இதனை மறந்திருக்க மாட்டார்கள். இந்த பிரச்சினைiயிலிருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினார்கள். சர்வதேச நாணய நிதியத்தை இதற்காக நாடுமாறு பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பலரும் கோரினார்கள். இதன் பலன் இன்று எமக்கு கிடைத்துள்ளது. 2.9 பில்லியன் டொலர் நிதியுதவி எமக்கு கிடைக்கவுள்ளது. ஐ.எம்.எப். இடம் செல்லது இது ஒன்றும் புதிதல்ல. நாம் 16 தடவைகள் ஐ.எம்.எப். இன் உதவியை நாடியுள்ளோம். இதனை இங்குள்ள பலர் மறந்துவிட்டார்கள். எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு, விவசாயிகளுக்கு மீண்டும் விவசாயம்...

சூழலை மாசுபடுத்துவதற்கு காரணமாக உள்ள அபிவிருத்தியடைந்த நாடுகள் நிதியுதவி அளிக்க வேண்டும் - ரணில் விக்ரமசிங்க

Image
சூழலை மாசுபடுத்துவதற்கு காரணமாக உள்ள அபிவிருத்தியடைந்த நாடுகள் நிதியுதவி அளிக்க வேண்டும் - ரணில் விக்ரமசிங்க vithusha saba 2 hours ago           t உலகில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க இலங்கை உள்ளிட்ட அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளால் மாத்திரம் முடியாது எனவும் சூழலை மாசுபடுத்துவதற்கு காரணமாக உள்ள அபிவிருத்தியடைந்த நாடுகள் நிதியுதவி அளித்து இதற்குப் பங்களிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.  காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு தேவையான வளங்களை பெற்றுக்கொடுக்க இலங்கை முதன்மையான முயற்சிகளை எடுக்கும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்தார். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (28) இடம்பெற்ற 2021-2022 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  மத்திய சுற்றாடல் அதிகார சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட “ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் 2021-2022” இல், கைத்தொழில், வணிகம...

சுனாமி அபாயம் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்

Image
  சுனாமி அபாயம் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் #tsunami #Sri Lanka #weather #Lanka4 சுனாமி அபாயம் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் கையடக்க தொலைபேசிகளுக்கான ரிங்டோனை அறிமுகப்படுத்த அனர்த்த முகாமைத்துவ நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கையில் 99.9 வீதமான மக்கள் கையடக்கத் தொலைபேசியை வைத்திருப்பதால், சுனாமி அபாயம் குறித்து கையடக்கத் தொலைபேசியின் ரிங்டோன் மூலம் அவர்களுக்குத் தெரிவிக்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.தொலைபேசி நிறுவனங்கள் இணைந்து இந்தப் பணியைச் செய்து வருவதாகத் தெரிவித்தார். பெரும்பாலானோர் அதிகாலை 1 மணி முதல் 4 மணி வரை உறங்கிக் கொண்டிருப்பதால், அந்த நேரத்தில் சுனாமி அபாயம் குறித்து தகவல் கிடைத்தால், அனைத்து கையடக்கத் தொலைபேசிகளிலும் ஒலிக்கும் முறைமை தயார் செய்யப்படும் என்றும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார். நாட்டின் கரையோரப் பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை சமிக்ஞை கோபுரங்கள் செயலிழந்தால் எதிர்காலத்தில் ஆபத்தான நிலைமை ...

சீன உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட வெளிநோயாளர் கட்டடத் திட்டம் உத்தியோகபூர்வமாக கையளிப்பு

Image
  சீன உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட வெளிநோயாளர் கட்டடத் திட்டம் உத்தியோகபூர்வமாக கையளிப்பு #China #Sri Lanka #sri lanka tamil news #Hospital #Colombo #Lanka4 சீன உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட வெளிநோயாளர் கட்டடத் திட்டம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhongனால் இந்த கட்டடம் உத்தியோகபூர்வமாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் நேற்று (25) கையளிக்கப்பட்டுள்ளது.80 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த திட்டம் சுமார் 50,000 சதுர மீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது. இந்த திட்டமானது தினசரி 6,000 வெளிநோயாளிகளுக்கு வசதிகளை வழங்குவதுடன், உள்ளூர் மருத்துவ இடர்பாடுகளை போக்க பெரிதும் உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சீனாவின் நீண்டகால ஆதரவைப் பாராட்டிய சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, வெளிநோயாளர் கட்டடமானது நாட்டின் சுகாதாரத் துறைக்கு உண்மையில் தேவைப்படும் திட்டமாகும் என தெரிவித்துள்ளார்.இதேவேளை சீன தூதுவர் இது குறித்து தெரிவிக்கையில், சீன அரசாங்கம் சுகாதாரத் துறைக்கு முன்னுரிமை அளித்துள்...

இலங்கையர்களுக்கான கொரிய தொழில் வாய்ப்புக்களை அதிகரிக்க நடவடிக்கை!

Image
  இலங்கையர்களுக்கான கொரிய தொழில் வாய்ப்புக்களை அதிகரிக்க நடவடிக்கை! #Sri Lanka #Sri Lanka President #work இலங்கையர்களுக்கான கொரிய தொழில் வாய்ப்புக்கான எண்ணிக்கையை 8 ஆயிரமாக அதிகரிக்க இணக்கம் காணப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொரிய மனித வள திணைக்களத்தின் பிரதானிகளுக்கிடையில் நேற்று (26) இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொரிய மொழி ஆற்றலைக்கொண்டு இணைய தளத்தின் மூலம் தொழில்வாய்ப்பை எதிர்பார்த்துள்ள 600 பேரை, கப்பல் கட்டுமானத் தொழில் துறையில் ஈடுபடுத்துவதற்கு இதன்போது உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக மனுஷ நாணயக்கார  தெரிவித்துள்ளார்.

என்னை சிறையில் அடைக்க அல்லது தூக்கிலிட முனைப்பு : மைத்திரி கவலை!

Image
  என்னை சிறையில் அடைக்க அல்லது தூக்கிலிட முனைப்பு : மைத்திரி கவலை! ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டுள்ள போதும் தன்னையும் குறி வைப்பதை ஏற்றுகொள்ள முடியாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தாலும், தாக்குதல்களின் குற்றவாளியாக என்னை காண்பது நியாயமற்றது. 2019 மே 21 ஆம் திகதி இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் இன்னமும் இடம்பெற்று வருகின்றது. இருந்தபோதும் தாக்குதல்கள் தொடர்பாக என்னை சிறையில் அடைக்க அல்லது தூக்கிலிடவே கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை விரும்புகின்றார். உரிய விசாரணைகள் முடிவடையாமல் அவர் இதைச் செய்ய முயற்சிக்கிறார்” என்றார்.

நாட்டின் கல்வி முறையை சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சிக்கும் இடமளிக்கப்பட மாட்டாது : ஜனாதிபதி !

Image
  நாட்டின் கல்வி முறையை சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சிக்கும் இடமளிக்கப்பட மாட்டாது : ஜனாதிபதி ! நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நாட்டின் கல்வி முறையை சீர்குலைக்கும் எந்தவொரு முயற்சிக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தேவைப்பட்டால், அத்தகைய நடத்தைக்கு தீர்வு காண புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் “நாட்டின் எதிர்காலம் கல்வியினால் தீர்மானிக்கப்படுகின்றது, 21ஆம் நூற்றாண்டுக்கு உகந்த கல்வியை பிள்ளைகளுக்கு வழங்குவதற்கு அனைவரும் தங்களை அர்ப்பணிக்க வேண்டும். 2048 ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியடைந்த இலங்கையை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத் திட்டத்தில் கல்வி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 2035 ஆம் ஆண்டளவில் நாட்டில் புதிய கல்வி முறையை உருவாக்குவதே அரசாங்கத்தின் அபிலாஷையாகும் எதிர்காலத்தில் கல்வியை நவீனமயப்படுத்துவதற்கு அரசாங்கம் பெருமளவு பணத்தைச் செலவிடத் தயாராக இருக்கின்றது, நாட்டின் மிக முக்கியமான தேசிய வளம் இளைஞர்கள், அவர்களுக்கு முறையான கல்வியை வழங்குவதன் மூலம் இலங்கையை இந்து சமுத்...