Posts

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

Image
  மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் ஒன்றை திங்கட்கிழமை (04) வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர். லியோபோகான் (LEOPOCON Sri Lanka) எனப்படும் இலாப நோக்கற்ற அமைப்பு எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவின் அடிப்படையிலேயே சிறுத்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மாதுரு ஓயா தேசிய பூங்காவில் இந்த சிறுத்தையின் சடலம் கிடந்ததாகவும், இவ் வருடத்தின் நடுப்பகுதி வரை 14 சிறுத்தைகள் வேட்டையாடப்பட்டுள்ளது என லியோபோகான் என தெரிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு கொத்மலை, கட்டுகித்துல பகுதியில் ஒரு வயதான ஆண் சிறுத்தை இறந்து கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கட்டுநாயக்கவில் கடவுச் சீட்டுக்கள் , மதுபான போத்தல்களுடன் இருவர் கைது

Image
  கட்டுநாயக்கவில் கடவுச் சீட்டுக்கள் , மதுபான போத்தல்களுடன் இருவர் கைது கட்டுநாயக்க பொலிஸ் பிரிவின் ஆடியம்பலம் பகுதியில் வேன் ஒன்றினை சோதனையிட்ட போது, வெளிநாட்டு கடவுச் சீட்டுக்கள் மற்றும் வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கைது நடவடிக்கை நேற்று திங்கட்கிழமை (04) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்கள் வத்தளை மற்றும் ஹல்துமுல்ல பகுதிகளைச் சேர்ந்த 22 மற்றும் 32 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது. இதன் போது, சோதனையிடப்பட்ட வேனிலிருந்து 35 வெளிநாட்டு கடவுச் சீட்டுக்கள் மற்றும் வெளிநாட்டு மதுபான போத்தல்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், இந்த சம்பவம் குறித்து கட்டநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,504 முப்படை வீரர்கள் கைது

Image
  சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,504 முப்படை வீரர்கள் கைது 2025 பெப்ரவரி 22 முதல் ஓகஸ்ட் 3 வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில், சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,504 முப்படை வீரர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.   கைது செய்யப்பட்டவர்களில் 2,937 இராணுவ வீரர்கள், 289 கடற்படை வீரர்கள், மற்றும் 278 விமானப்படை வீரர்கள் உள்ளடங்குவதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 2024 ஏப்ரல் 20 முதல் மே 20 வரை அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பு காலத்தில் சரணடையாத முப்படை வீரர்களைக் கைது செய்ய, பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின் பேரில் 2025 பெப்ரவரி 22 முதல் விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கைது செய்யப்பட்ட வீரர்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், இவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சிறார்களுக்கு தொல்பொருள் தளங்களை இலவசமாக பார்வையிட வாய்ப்பு

Image
  சிறார்களுக்கு தொல்பொருள் தளங்களை இலவசமாக பார்வையிட வாய்ப்பு மத்திய கலாச்சார நிதியத்திற்குச் சொந்தமான திட்டங்களை பார்வையிட 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு இலவச அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மத்திய கலாச்சார நிதிய நிர்வாக சபை இந்த முன்மொழிவை அங்கீகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் சிறார்களிடையே கலாச்சார பாரம்பரியத்தின் மீதான மதிப்பை ஏற்படுத்துவதும், தேசிய பாரம்பரிய இடங்கள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதும் இதன் முதன்மை நோக்கமாகும். இதன்படி, சிகிரியா, யாபஹு, தம்புள்ளை உள்ளிட்ட மத்திய கலாச்சார நிதியத்திற்குச் சொந்தமான 26 தொல்பொருள் மதிப்புமிக்க தளங்களை நுழைவுச் சீட்டு இன்றி உள்ளூர் சிறார்கள் பார்வையிடலாம். இதற்கு இணையாக, வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளின் கீழ் வெளிநாட்டு சிறார்களுக்கும் இலவச நுழைவு அனுமதி வழங்கப்படவுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார துணை அமைச்சர் கமகேதர திசாநாயக்க தெரிவித்தார்.

இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 இந்தியர்கள் கைது !

Image
  இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 இந்தியர்கள் கைது ! தலங்கம, அக்குரேகொட பகுதியில் இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 இந்தியர்கள் நேற்று (04) இரவு கைது செய்யப்பட்டதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில், கணினிகள் மற்றும் கைபேசிகளைப் பயன்படுத்தி இணைய சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 8 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் உட்பட 11 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 20 கைபேசிகள், 3 மடிக்கணினிகள் மற்றும் ஒரு டேப்லெட் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட பெண் சந்தேக நபர்கள் 22, 30 மற்றும் 43 வயதுடையவர்கள் எனவும், ஆண் சந்தேக நபர்கள் 25, 26, 27 மற்றும் 29 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். தலங்கம பொலிஸார் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தீர்வை வரிக்குறைப்பைப் பெறுவதற்கு எட்டப்பட்ட உடன்படிக்கைகள் என்ன? - அரசாங்கம் பொதுமக்களுக்குப் பகிரங்கப்படுத்தவேண்டும் - நாமல் !

Image
  தீர்வை வரிக்குறைப்பைப் பெறுவதற்கு எட்டப்பட்ட உடன்படிக்கைகள் என்ன? - அரசாங்கம் பொதுமக்களுக்குப் பகிரங்கப்படுத்தவேண்டும் - நாமல் ! அமெரிக்காவினால் இலங்கை ஏற்றுமதிகளுக்கான தீர்வை வரி 20 சதவீதமாகக் குறைக்கப்பட்டமை தொடர்பில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இருப்பினும் இந்த வரிக்குறைப்பைப் பெற்றுக்கொள்வதற்காக அமெரிக்க அரசாங்கத்துடன் எட்டப்பட்ட வர்த்தக மற்றும் பாதுகாப்பு உடன்படிக்கைகள் தொடர்பான விபரங்களை அரசாங்கம் பொதுமக்களுக்குப் பகிரங்கப்படுத்தவேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் நாமல் ராஜபக்ஷ, அதில் மேலும் கூறியிருப்பதாவது; அமெரிக்காவினால் இலங்கை ஏற்றுமதிகளுக்கான தீர்வை வரி வியட்நாம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைப்போன்று 20 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க விடயமாகும். இவ்விடயத்தில் அமெரிக்க வர்த்தகத்துறைப் பிரதிநிதிகளுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தைப் பாராட்டுகின்றேன். இருப்பினும் இந...

மாவடிப்பள்ளி ஆற்றில் மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் சடலம்!

Image
 மாவடிப்பள்ளி ஆற்றில்  மீட்கப்பட்ட குடும்பஸ்தரின் சடலம்! காரைதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிப்பள்ளி ஆற்றில் குடும்பஸ்தரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. காயங்களுடன்  மீட்கப்பட்டு அடையாளமங்காணப்பட்ட குடும்பஸ்தரின் சடலம் குறித்து காரைதீவு  பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அம்பாறை மாவட்டம், காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி ஆற்றில் 53 வயது மதிக்கத்தக்க மட்டக்களப்பு மாவட்டம், செங்கலடி பகுதியைச்சேர்ந்த  பாக்கியராசா கிருபாகரன் என்ற குடும்பஸ்தரே இன்று (3) சடலமாக மீட்கப்பட்டிருந்தார். மேலும், சடலமாக மீட்கப்பட்ட குறித்த குடும்பஸ்தரின் கழுத்து மற்றும் தலை, தோல்பட்டை உள்ளிட்ட பகுதில்  காயங்கள் காணப்படுவதாக ஆரம்பக்கட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. மாவடிப்பள்ளி பகுதியிலுள்ள அரிசி ஆலையொன்றில் தொழிலாளியாக இருந்ததுடன், நேற்று முதல் காணாமற் போனதாக அரிசி ஆலை உரிமையாளர் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையின் போது குறிப்பிட்டார். மேலும், சம்பவ இடத்திற்கு கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் சென்று மேற்பார்வை செய்து விசாரணை...