ஆணைக்குழு உறுப்பினர்கள் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவார்கள் : தேர்தல்கள் ஆணைக்குழு!

 

ஆணைக்குழு உறுப்பினர்கள் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவார்கள் : தேர்தல்கள் ஆணைக்குழு!

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மீதான மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் திட்டமிட்ட வகையில் போலி செய்திகள் வெளியாகுவதனை அவதானிக்க முடிகிறது.

ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அரசியலமைப்பின் பிரகாரம் உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் பதவி விலக உள்ளதாகவும், ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளன.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் சுயமாக பதவி விலகல் அல்லது பதவி விலகியதாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக குறிப்பிடப்படும் கடிதத்தின் பிரதிகள் ஏதும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இதுவரை உத்தியோகப்பூர்வமாக சமர்ப்பிக்கப்படவில்லை.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட உறுப்பினர்கள் அரசியலமைப்பின் பிரகாரம் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை தடையில்லாமல் முன்னெடுப்பார்கள்.

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மீதான மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் வகையில் திட்டமிட்ட வகையில் போலி செய்திகள் வெளியாகுகின்றமை அவதானிக்க முடிகிறது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !