அவுஸ்ரேலியாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் விபத்து : நால்வர் மாயம்!
அவுஸ்ரேலியாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் விபத்து : நால்வர் மாயம்!
#Australia #Accident #Lanka4

குயின்ஸ்லாந்து கடற்கரையில் அவுஸ்ரேலியாவிற்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளான நிலையில், நான்கு பேர் காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்த MRH-90 தைப்பான் என்ற ஹெலிகொப்டர் ஒன்றே இவ்வாறு விபத்தில் சிக்கியதாக பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸ் இன்று (29.07) தெரிவித்துள்ளார்.
"இந்த சம்பவம் குறித்து நான்கு விமானப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
காணாமல்போனவர்களை தேடும் பணி நேற்றில் இருந்து தொடர்ச்சியாக 12 மணிநேரமாக நடைபெற்று வருவதாக அவர் அறிவித்துள்ளார்.
Comments
Post a Comment