வற்றாப்பளை ஆலயத்திற்கு சென்று திரும்பிய பஸ் விபத்து; 6 பேர் காயம் !

 

வற்றாப்பளை ஆலயத்திற்கு சென்று திரும்பிய பஸ் விபத்து; 6 பேர் காயம் !



யாழ்ப்பாணத்தில் இருந்து வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்கு சென்று, மீண்டும் யாழ் நோக்கி திரும்பிக்கொண்டிருந்த பஸ் பூநகரி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் நேற்று (21) நடைபெற்ற விசாக பொங்கலுக்கு , யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் இருந்து வாடகைக்கு பஸ் ஒன்றினை ஒழுங்கு செய்து பக்தர்கள் சென்றிருந்தனர்.

பொங்கல் திருவிழாவை முடித்துக்கொண்டு , இன்று (21) மீண்டும் யாழ்ப்பாணம் நோக்கி திரும்பிக்கொண்டிருந்த வேளை பூநகரி , சங்குப்பிட்டி பாலத்தை அண்மித்த பகுதியில் பஸ் வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

அதில் பஸ்ஸில் பயணித்த 6 பேர் காயமடைந்த நிலையில் பூநகரி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !