பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்ட தலைவர் ரணிலுக்கு நன்றிக்கடன் செலுத்த மக்கள் தயார்- சாந்த பண்டார !

 

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்ட தலைவர் ரணிலுக்கு நன்றிக்கடன் செலுத்த மக்கள் தயார்- சாந்த பண்டார !


பயங்கரவாதத்தை தோல்வியுறச்செய்து நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாத்தமைக்கு நன்றிக் கடனாக நாட்டு மக்கள் 2005 ஆம் ஆண்டு நிபந்தனைகள் எதுவுமின்றி இன, மத பேதங்களைக் கடந்து மஹிந்த ராஜபக் ஷவை ஜனாதிபதியாக்கினர்.

அதேபோன்று, தற்போது நாட்டையும் மக்களையும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு, நாட்டு மக்கள் ஒன்றிணைந்து நன்றிக்கடன் செலுத்த தீர்மானித்துள்ளதாக ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து, “இயலும் ஸ்ரீலங்கா” மாபெரும் மக்கள் பேரணிக் கூட்டம் நேற்று முன்தினம் நாரம்மல நகரில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார,

தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொது ஜன பெரமுன கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி உட்பட 37 கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஒன்றாக கைகோர்த்துள்ளன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு மேற்கொண்ட அர்ப்பணிப்புக்கு நன்றிக் கடன் செலுத்தும் வகையிலேயே நாம் ஒன்றாக இணைந்து அவருக்கு ஆதரவு வழங்குகின்றோம்.

அத்துடன், எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நன்றிக் கடனாக எமது முழுமையான ஆதரவையும் தேர்தலில் வழங்குவோம்.

அந்தவகையில், குருநாகல் மாவட்ட மக்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுக்கொடுப்பர். வங்குரோத்தடைந்திருந்த நாட்டை பொருளாதாரத்தில் முன்னேற்றி இயல்பு நிலைக்குகொண்டு வந்த தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் உணவுப் பொருட்கள், எரிபொருள், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின்றி மக்கள பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டபோது, நாடு பெரும் நெருக்கடியை எதிர்கொண்ட சந்தர்ப்பத்தில் துணிச்சலுடன் முன்வந்து நாட்டை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பொறுப்பேற்றவர் ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்க மட்டுமே என அவர் மேலும் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !