Posts

Showing posts from May, 2025

சிறுவர்களின் பாதுகாப்பிற்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்- சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் !

Image
  சிறுவர்களின் பாதுகாப்பிற்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்- சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் ! நாட்டில் உள்ள சிறுவர்களின் பாதுகாப்பிற்காக அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து செயல்பட வேண்டுமென மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார். அமைச்சில் நேற்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர், சிறுவர்களுக்கு துஷ்பிரயோகம் ஏற்படும் அனைத்து வகையான வன்முறைகளிலிருந்தும் பாதுகாக்க பல்துறை பொறிமுறை ஒன்றை நிறுவும் நோக்கத்துடன் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு செயற்பட்டு வருகிறது. சிறுவர்களுக்கு பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதற்கான இந்த பன்முகத்தன்மை கொண்ட பொறிமுறையின் முக்கியதவத்தை வெளிப்படுத்த வேண்டும். மேலும், இந்த பன்முகத்தன்மை கொண்ட பொறிமுறையை நிறுவதற்கு ஜனாதிபதி, சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சர், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஆகியோர் இந்த பன்முகத்தன்மை கொண்ட பொறிமுறையை நிறுவ உத்தரவிட்டனர். அமைச்சுக்களின் அமைச்சர்களினா...

சமூக ஊடகங்களில் வாகன விற்பனை மோசடி செய்த இளைஞர் கைது !

Image
  சமூக ஊடகங்களில் வாகன விற்பனை மோசடி செய்த இளைஞர் கைது ! விற்பனைக்கு உள்ள வாகனங்களின் விளம்பரங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு பண மோசடி செய்த குற்றச்சாட்டுக்காக ஹல்துமுல்ல பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பலாங்கொடை நகரில் உள்ள ஹல்துமுல்ல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் நேற்று (மே 28) சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். இந்த சந்தேக நபர் தன்னிடம் முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் விற்பனைக்கு இருப்பதாக சமூக ஊடகங்களில் விளம்பரங்களை வெளியிட்டு, பின்னர் தனது வங்கிக் கணக்கில் முன்பணத்தை பெற்று மோசடி செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். நிதி மோசடி தொடர்பாக அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் பேரில் தொடங்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேக நபர் பலாங்கொடையைச் சேர்ந்த 29 வயதுடையவர். ஹல்துமுல்ல, சமனலவேவ, கேகாலை மற்றும் கண்டி போன்ற பல்வேறு பகுதிகளில் தனிநபர்களிடம் சுமார் 200,000 ரூபாய் மோசடி செய்துள்ளதாக விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது. சந்தேக நபர் செய்த பிற மோசடிகள் தொடர்பான தகவல்களைக் கண்டறிய ஹல்துமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைக...

ட்ரம்பின் வரி விதிப்புக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

Image
  ட்ரம்பின் வரி விதிப்புக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு டொனால்ட் ட்ரம்பின் வரி விதிப்புக்கு தடை விதித்து அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ட்ரம்ப் அதிகாரத்தை மீறி செயல்படுவதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.   மேலும், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 'டாஜ்' என்ற துறையில் இருந்து விலகுவதாக தொழிலதிபர் எலான் மஸ்க் அதிரடியாக அறிவித்துள்ளார். ட்ரம்ப் அளித்த பதவியில் பணியாற்ற 130 நாட்கள் மஸ்க் ஒப்புக்கொண்டிருந்த நிலையில் திடீரென அந்த பொறுப்பில் இருந்து அவர் விலகியுக்ள்ளார். டாஜ் துறையில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்தது டிரம்புக்கு பெரிய அதிர்ச்சியாக அமைந்திருந்த நிலையில், நீதிமன்ற தீர்ப்பும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு பின்னடைவாக அமைந்து இருக்கிறது. இதனால் ஒரே நாளில் அடுத்தடுத்த இரண்டு பின்னடவுகளை ட்ரம்ப் எதிர்கொண்டுள்ளார். அமெரிக்காவிற்குள் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு வரி விதிப்பு, பரஸ்பர வரி விதிப்பு என பல கெடுபிடிகளை ட்ரம்ப் மேற்கொண்டு வந்தார். அதேபோல, அமெரிக்காவில் வாங்குவதை விட அதிகம் விற்கும் நிறுவனங்களுக்கு எதிராகவும் ட...

பஸ்ஸின் மிதி பலகையில் இருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழப்பு !

Image
  பஸ்ஸின் மிதி பலகையில் இருந்து தவறி விழுந்த இளைஞர் உயிரிழப்பு ! பஸ்ஸின் மிதி பலகையில் இருந்து தவறி விழுந்த நிலையில், வைத்தியசாலை சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் புலோப்பளை, பளையைச் சேர்ந்த அன்ரனி அருள்தாஸ் நிதுராஜ் (வயது 26) என்ற இளைஞராவார். மேற்படி இளைஞர் கடந்த 23 ஆம் திகதி காலை மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருந்த இ.போ.ச பாஸ்ஸின் மிதி பலகையில் நின்று பயணித்துள்ளார். இதன் போது பயணிகள் ஏறும் போது அவர் இறங்கி ஏறியுள்ளார். இந்நிலையில், கரந்தாய் பகுதியில் இறங்கிவிட்டு ஏறும்போது பஸ் வண்டியிலிருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். இதனை அடுத்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு இருந்த நிலையில் நேற்று முந்தினம் செவ்வாய்க்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை பளைப் பொலிஸார் நெறிப்படுத்தினர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் போக்குவரத்து சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் !

Image
  மட்டக்களப்பு மாவட்டத்தில் போக்குவரத்து சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ! மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 மாதங்களில் வீதி விபத்தில் 32 பேர் உயிரிழந்துள்ளனர். இது மிகவும் கவலையானது இருந்த போதும் போக்குவரத்தை துப்பரவு செய்யப்பட வேண்டும், எனவே மாவட்டத்தில் வீதி நடைபாதையை ஆக்கிரமித்துள்ள வர்த்தகர்களை உடனடியாக அகற்றவேண்டும், அதேபோல் மோட்டார் சைக்கிளில் தலைகவசம் இல்லாது பயணிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர கட்டளை பிறப்பித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட வீதி பாதுகாப்பு குழு கூட்டம் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலய மாநாடு மண்டபத்தில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.லலித் லீலாரத்தின தலைமையில் நேற்று (28) இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் வர்ண ஜெயசுந்தர இவ்வாறு பொலிஸாருக்கு கட்டளையிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மாவட்டத்தில் கடந்த 2024 ஜனவரி 01 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 31 ஆம் திகதி வரை 611 வீதி விபத்துகளில் 72 பேர...

விற்பனைக்கு தயாராக இருந்த கஜமுத்துடன் இருவர் கைது !

Image
  விற்பனைக்கு தயாராக இருந்த கஜமுத்துடன் இருவர் கைது ! விற்பனை செய்யவதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 170 கிராம் கஜமுத்துவை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்கள் கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு, கொம்பனி வீதி, ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தையில் நேற்று (28) பிற்பகல் நடத்தப்பட்ட சோதனையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் ஜா-எல பகுதியைச் சேர்ந்த 31 மற்றும் 27 வயதுடையவர்கள் என அடையாள் காணப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் கொம்பனி வீதி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பலத்த காற்றினால் வாவிக்குள் தூக்கி வீசப்பட்ட முச்சக்கரவண்டி !

Image
  பலத்த காற்றினால் வாவிக்குள் தூக்கி வீசப்பட்ட முச்சக்கரவண்டி ! அநுராதபுரத்தில் வீசிய பலத்த காற்று காரணமாக திஸ்ஸ வாவிக்கு அருகில் உள்ள வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று வாவிக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளது. இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்றுள்ளது. பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸ் உயிர்காப்பு பிரிவினர் இணைந்து முச்சக்கரவண்டியை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

இன்றைய தங்கவிலை நிலவரம் !

Image
  இன்றைய தங்கவிலை நிலவரம் ! இன்று புதன்கிழமை (28) கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு, 1 கிராம் தங்கம் (22 கரட்) - ரூ.30,412 1 பவுண் தங்கம் (22 கரட்) - ரூ.243,300 1 கிராம் தங்கம் (24 கரட்) - ரூ.32,875 1 பவுண் தங்கம் (24 கரட்) - ரூ.263,000

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் சிவப்பு எச்சரிக்கை !

Image
  பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தால் சிவப்பு எச்சரிக்கை ! பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை விடுத்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அறிவித்தலை விடுத்துள்ளது. சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக ஹம்பாந்தோட்டை வரையிலும் உள்ள கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை இன்று (28) பிற்பகல் 12.30 மணி முதல் நாளை (29) பிற்பகல் 12.30 மணி வரை செல்லுபடியாகும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது. தென்மேற்குப் பருவமழையின் தாக்கம் காரணமாக, சிலாபம் முதல் புத்தளம் மற்றும் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரைக்கு அப்பால் உள்ள கடல் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 60-70 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், இந்தக் கடல் பகுதிகள் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும். இதே நேரத்தில், சிலாபம் முதல் கொழும்பு வழியாக காலி வரையிலும், காங்கேசன்துறை முதல் முல்ல...

இன்று நள்ளிரவு முதல் அனைத்து தபால் நிலையங்களும் அடையாள வேலை நிறுத்தத்தில் !

Image
  இன்று நள்ளிரவு முதல் அனைத்து தபால் நிலையங்களும் அடையாள வேலை நிறுத்தத்தில் ! நாடளாவிய அனைத்து தபால் நிலையங்களிலும் அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்கப் போவதாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று (28) நள்ளிரவு முதல் இந்த அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படும் என்று சங்கத்தின் தலைவர் ஜி.ஜி.சி. நிரோஷன தெரிவித்தார். அதேநேரம் கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையத்தின் அடையாள வேலைநிறுத்தம் இன்று மாலை 4.00 மணிக்கு தொடங்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இன்றைய நாணய மாற்று விகிதம் !

Image
  இன்றைய நாணய மாற்று விகிதம் ! இன்று புதன்கிழமை (28) இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 295.5596 ஆகவும் விற்பனை விலை ரூபா 304.0121 ஆகவும் பதிவாகியுள்ளது.

“ஹரக் கட்டா”வுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை ஜூன் மாதம் !

Image
  “ஹரக் கட்டா”வுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை ஜூன் மாதம் ! குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்றமை தொடர்பில் பாதாள உலக கும்பலின் தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “ஹரக் கட்டா” என அழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன என்பவர் உட்பட மூவருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 09ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று புதன்கிழமை (28) உத்தரவிட்டுள்ளது. சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள “ஹரக் கட்டா” பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

450 கிலோ போதைப்பொருட்களுடன் 11 மீனவர்கள் கைது !

Image
  450 கிலோ போதைப்பொருட்களுடன் 11 மீனவர்கள் கைது ! இலங்கையின் தெற்கு கடற்கரையிலிருந்து ஆழ்கடலில் நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கையில், பெருமளவிலான போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு பல நாள் மீன்பிடி படகுகள் நேற்று (27) கைப்பற்றப்பட்டன. குறித்த படகுகளில் இருந்து ஹெராயின் மற்றும் மெத்தம்பேட்டமைன் (ICE) உள்ளிட்ட போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இலங்கை கடற்படையின் தகவல்களுக்கு அமைவாக, கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த எடை சுமார் 450 கிலோ கிராம் ஆகும். இந்த சம்பவம் தொடர்பாக மொத்தம் 11 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மாத்தறை, தேவேந்திரமுனை பகுதியைச் சேர்ந்தவர்கள் என கடையினர் கூறியுள்ளனர். இலங்கை கடற்படையின் கூற்றுப்படி, இந்த நடவடிக்கையை இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் (PNB) இணைந்து மேற்கொண்டன.

பாலமுனையில் ஐஸ் போதைப்பொருளுடன் பிரபல போதைப்பொருள் வர்த்தகர்கள் இருவர் கைது !

Image
  பாலமுனையில் ஐஸ் போதைப்பொருளுடன் பிரபல போதைப்பொருள் வர்த்தகர்கள் இருவர் கைது ! மட்டக்களப்பில் 2788 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த பிரபல போதைப்பொருள் வர்த்தகர்கள் இருவர் செவ்வாய்க்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர். மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனை பிரதேசத்தில் ஆர் டி எஸ் வீதியில் வைத்து 30 மற்றும் 35 வயதுகளையுடைய இரு போதைப்பொருள் வர்த்தகர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி குற்றத்தடுப்பு பிரிவினர் மேலும் தெரிவித்தனர். 30 வயதுடைய வர்த்தகரிடமிருந்து 1228 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும், 35 வயதுடைய நபரிடமிருந்து 1560 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்ட நபர்கள் புதன்கிழமை (28) மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ராஜகிரியவில் வணிக வளாகம் ஒன்றில் தீ விபத்து !

Image
  ராஜகிரியவில் வணிக வளாகம் ஒன்றில் தீ விபத்து ! ராஜகிரிய பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் இன்று (27) மதியம் தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. தற்போது மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், தீயை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

'கடலோர இரவுப் பொழுது : உறங்காத கொழும்பு' கருத்திட்டத்திற்கு அனுமதி !

Image
  'கடலோர இரவுப் பொழுது : உறங்காத கொழும்பு' கருத்திட்டத்திற்கு அனுமதி ! இரவுப் பொழுதில் உல்லாச செயற்பாடுகளை அதிகரிப்பதன் மூலம் உள்நாட்டு பொருளாதாரத்தை அதிகரித்தல், சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் மற்றும் கொழும்பு நகரில் அனுபவிக்கக்கூடிய உல்லாச அனுபவங்களை அதிகரிப்பதற்கும் கட்டமைப்பு ரீதியான அணுகலுக்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, 'கடலோர இரவுப் பொழுது : உறங்காத கொழும்பு' (Marine Nights: Awakening Colombo) தொனிப்பொருளின் கீழ் கொள்ளுப்பிட்டி புகையிரத நிலையத்திலிருந்து தெஹிவல வரைக்குமான 7.4 கிலோமீற்றர் தூரம் கொண்ட கொழும்பு கடலோர வீதியை அபிவிருத்தி செய்யும் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் காலி முகத்திடல் தொடக்கம் புனித தோமஸ் ஆரம்ப பாடசாலை வரைக்கும் 400 மீற்றர் தூரமான வலயத்தில் அதிக கவனம் செலுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வெளி விவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரச சேவையில் 15,073 வெற்றிடங்கள் - ஆட்சேர்ப்பு செய்ய அனுமதி !

Image
  அரச சேவையில் 15,073 வெற்றிடங்கள் - ஆட்சேர்ப்பு செய்ய அனுமதி ! அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவத்துக்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் ஆளணி முகாமைத்துவத்துக்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு (2) அறிக்கைகள் ஊடாக 18 நிரல் அமைச்சுக்கள், 04 மாகாண சபைகள் மற்றும் 02 விசேட செலவு அலகுகளில் நிலவும் 15,073 வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கு விதந்துரை செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த அறிக்கை மூலம் விதந்துரை செய்யப்பட்ட ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது .

சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களைக் குறைக்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் !

Image
  சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களைக் குறைக்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் ! சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களைக் குறைப்பதற்காக ஒருங்கிணைந்த அணுகுமுறையுடன் கூடிய பல் துறைசார் பொறிமுறையை நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2025.03.03 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்ட புதிய அரசின் கொள்கைச் சட்டகத்தில் 'பாதுகாப்பான சிறுவர் உலகம் - ஆக்கபூர்வமான எதிர்கால சந்ததி' எனும் கொள்கை ரீதியான கடப்பாட்டின் பிரதான கோட்பாடாக அமைகின்ற பிள்ளைகளுக்கு இடம்பெறுகின்ற துஷ்பிரயோகங்கள் மற்றும் அனைத்துவித பாதுகாப்புத் தொடர்பாக பல்வேறு விதமாக தலையிடுகின்ற பங்காளர்கள் சிலர் சிறுவர் விவகார அமைச்சு, சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, மற்றும் இலங்கை பொலிஸ் முக்கிய பணிகளை ஆற்றி வருகின்றது. பிள்ளைகளுக்கு இடம்பெறுகின்ற துஷ்பிரயோகங்கள் மற்றும் அனைத்துவித வன்முறைகள் தொடர்பாக தேசிய பாதுகாப்பு அதிகாரசபையால் 24 மணிநேர முறைப்பாடுகளை மேற் கொள்ளக்கூடிய வசதிகளை வழங்கியுள்ளது. ஆயினும், முறையான வகையில...

இன்றைய தங்கவிலை நிலவரம் !

Image
  இன்றைய தங்கவிலை நிலவரம் ! இன்று செவ்வாய்க்கிழமை (27) கொழும்பு செட்டியார் தெருவில் விற்பனை செய்யப்படும் தங்கத்தின் விலை நிலைவரம் வருமாறு, 1 கிராம் தங்கம் (22 கரட்) - ரூ.30,475 1 பவுண் தங்கம் (22 கரட்) - ரூ.243,800 1 கிராம் தங்கம் (24 கரட்) - ரூ.33,125 1 பவுண் தங்கம் (24 கரட்) - ரூ.265,000

வாய்க்காலில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து 3 பிள்ளைகளின் தந்தை பலி - கிளிநொச்சி சம்பவம்

Image
  வாய்க்காலில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து 3 பிள்ளைகளின் தந்தை பலி - கிளிநொச்சி சம்பவம் கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கணேசபுரம் பகுதியில் நீர் வடிகால் வாய்க்காலில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் சனிக்கிழமை (24) இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர், கிளிநொச்சி 190 ஆம் இலக்கத்தில் வசிக்கும் 36 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் ஆவார். குறித்த மரணம் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட பதில் நீதிவான் சிவபால சுப்பிரமணியம் நேரில் சென்று நிலமையை பார்வையிட்டு, மரண விசாரணை மேற்கொள்ள உயிரிழந்தவரின் சடலத்தை மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பினார். இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தேர்தல் அறிக்கைகளை சமர்பிக்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை !

Image
  தேர்தல் அறிக்கைகளை சமர்பிக்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை ! உள்ளூராட்சித் தேர்தலுக்கான செலவு அறிக்கைகளை எதிர்வரும் 27 ஆம் திகதி நள்ளிரவுக்குள் சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காத வேட்பாளர்களின் விபரங்கள் குறித்த திகதிக்குப் பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பொலிஸ் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று வேட்பாளர்கள் மீது வழக்குத் தொடரப்படும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் !

Image
  நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் ! எதிர்வரும் காலங்களில் நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அடுத்த சில மணித்தியாலங்களுக்கு மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் ​தெரிவிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மருந்துச் சீட்டு இல்லாமல் பெருமளவிலான மருந்துகளை வேனில் கொண்டு சென்ற பெண் கைது

Image
  மருந்துச் சீட்டு இல்லாமல் பெருமளவிலான மருந்துகளை வேனில் கொண்டு சென்ற பெண் கைது சிலாபம் - புத்தளம் பிரதான வீதியில் வேனில் பெருமளவிலான மருந்துகளை கொண்டு சென்ற 29 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். மருந்துச் சீட்டு இல்லாமல் மருந்துகளை கொண்டு சென்ற குற்றத்திற்காக பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர் தெதுரு-ஓயா வீதிக்கு அருகில் பொலிஸார் சோதனையில் ஈடுப்பட்ட போது வேனில் பயணித்த குறித்த பெண்ணிடமிருந்து 64 பெட்டிகள் அடங்கிய மருந்துகளை பொலிஸார் கைப்பற்றினர். இந்த வியடம் தொடர்பில் பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது பெண் வழங்கிய பதில் குறித்து பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்ப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த பெண்ணை சந்தேகத்தின் பேரில் கைது செய்ததுடன் மருந்துகளையும் வேனையும் பறிமுதல் செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹெரோயினுடன் கைதான பெண்களிடம் இலஞ்சம்பெற முயன்ற மது வரித்திணைக்கள கட்டுப்பாட்டாளர்கள் இருவருக்கு 28 வருட கடூழியச் சிறை

Image
  ஹெரோயினுடன் கைதான பெண்களிடம் இலஞ்சம்பெற முயன்ற மது வரித்திணைக்கள கட்டுப்பாட்டாளர்கள் இருவருக்கு 28 வருட கடூழியச் சிறை ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட பெண்கள் இருவருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பதற்கு அவர்களிடமிருந்து ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்றுக்கொள்வதற்கு முயற்சித்த சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்பட்ட மது வரித் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர்கள் இருவருக்கு 28 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் வெள்ளிக்கிழமை (23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன் பிரதிவாதிகள் இருவருக்கும் அந்த தண்டனையை 7 வருடங்களில் அனுபவிக்குமாறு நீதிபதி இதன்போது உத்தரவு பிறப்பித்தார். 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பெண்கள் இருவர் மதுவரி திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில் குறித்த சந்தேகநபர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாது இந்தக்குற்றச்ச...

கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக அதாஉல்லா - மு.கா. , தே.கா. தலைவர்கள் கூட்டு சந்திப்பில் இணக்கம்

Image
  கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக அதாஉல்லா - மு.கா. , தே.கா. தலைவர்கள் கூட்டு சந்திப்பில் இணக்கம் நடைபெறப்போகும் மாகாண சபைத்தேர்தலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக தேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லா களமிறங்கவுள்ளதாக தேசிய காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் பீட உறுப்பினர்கள் ஊர்ஜிதம் செய்துள்ளனர். கடந்த வாரம் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பானது எதிர்காலத்தில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது பற்றியதானதெனவும் தெரிவித்தனர். குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் பொதுச்சின்னத்தில் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாவை முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்கான முஸ்தீபுகள் இடம்பெறுவதாக அரசியல் பீட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ் எம்.எம். முஷாரப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவது குறித்து பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவ...

சிறுமி பா லி ய ல் து ஷ் பி ர யோ க ம்; பஸ் நடத்துனர் கைது !

Image
  சிறுமி பா லி ய ல் து ஷ் பி ர யோ க ம்; பஸ் நடத்துனர் கைது ! கடந்த 21 ஆம் திகதி காணமல்போன சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். நமுனுகுலையை சேர்ந்த, பசறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 13 வயதுடைய சிறுமியே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 21 ம் திகதி பாடசாலைக்கு செல்லாமல் கோழிகளுக்கான உணவை கொள்வனவு செய்வதற்காக பசறை நகருக்கு சென்ற தனது மகள் வீடு திரும்பவில்லை என பசறை பொலிஸ் நிலையத்தில் கடந்த 21 ஆம் திகதி குறித்த சிறுமியின் தந்தையினால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். முறைப்பாட்டிற்கு அமைய உடன் விசாரணைகளை மேற்கொண்ட பசறை பொலிஸார் பசறை டெமேரியா மீரியபெத்த ராக்கமலை பகுதியில் லயன் குடியிருப்பு வீடொன்றில் இருந்து சிறுமியை மீட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். பின்னர் சிறுமியிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது, தான் பசறை நகருக்கு சென்ற போது பஸ் ஒன்றின் நடத்துந...