Posts

Image
 சாய்ந்தமருது வை.எம்.ஹனீபா சேர் வபாத்  சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத்தலைவர், மருதூரின் பொக்கிஷம், எம் உணர்வுகளில் கலந்திட்ட அல்ஹாஜ் வை.எம்.ஹனீபா சேர் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன். - வியூகம் ஜனூஸ் சம்சுதீன்
Image
 ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட மனித உரிமை தொடர்பான பிரேரணையை செயற்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு எவரும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது.   ஐ.நா.வில் நிறைவேற்றப்பட்ட மனித உரிமை தொடர்பான பிரேரணையை செயற்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்துக்கு எவரும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.  பொலன்னறுவையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் ​தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அமைச்சர் சரத் வீரசேகர மேலும் கூறியுள்ளதாவது, “ஐ.நா மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையானது குறுகிய அரசியல் நோக்கங்களுக்கானதாகும். மேலும் இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தம் தொடர்பாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களே முன்வைக்கப்பட்டுள்ளன. ஆகவே, இலங்கைக்கு எதிராக தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை செயற்படுத்த வேண்டிய அவசியம் கிடையாது. அத்துடன் இவ்விடயத்தில் எவரும் இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்க முடியாது. ஐ.நா.பிரேரணை குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவை...
Image
 சீன தேசிய மருந்தகத்தினால் இலங்கைக்கு 6 லட்சம் தடுப்பூசிகள் வழங்கிவைப்பு .   சீன தேசிய மருந்தகத்தினால் உலகம் பூராகவும் உள்ள நாடுகளுக்கு நூறு மில்லியன் கோவிட் 19 தடுப்பூசிகள் கடந்த வெள்ளிக்கிழமை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இலங்கைக்கான ஆறு லட்சம் தடுப்பூசிகள் கடந்த ஞாயிற்றுகிழமை சீன பிரதான விமான நிலையமான பீஜிங் விமான நிலைய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆறு லட்சம் தடுப்பூசிகளும் எதிர்வரும் புதன்கிழமை (31) காலை பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடையும் என எதிர்ப்பார்க்கபப்டுகிறது.  இதன் மூலம் கோவிட் 19 தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற்ற இலங்கையர்களாக நாம் வாழ்வதற்கான சந்தர்ப்பம் கிட்டும் என நம்பப்படுகிறது. நூருள் ஹுதா உமர்.
Image
 . மாவட்ட நீதவான் முன்னிலையில், ஆசிரியை றினோஸா மொழி பெயர்ப்பாளராக சத்தியப்பிரமாணம்.   நூறுல் ஹுதா உமர் சம்மாந்துறை சது/அல்-அர்ஸத் மகா வித்தியாலய ஆங்கிலப்பாட ஆசிரியை திருமதி ஏ.பீ.பாத்திமா றினோஸா நீதி அமைச்சினால் நடாத்தப்படும் பரீட்சை  தேர்வின் படி வழங்கப்பட்ட நியமனத்தின் பிரகாரம் 2021.03.25 ம் திகதி கல்முனை மாவட்ட நீதவான் இஸ்மாயில் பயஸ் றஸாக் முன்னிலையில் மொழி பெயர்ப்பாளராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.  இவர் தனது ஆசிரியர் சேவையை மூதூர் உமர் பாறூக் வித்தியாலயத்திலும் பின்னர் வரிப்பத்தான்சேனை லீடர் ஜூனியர் பாடசாலையிலும் சேவையாற்றியதுடன். தனது இளமாணிப் பட்டத்தினை ஆங்கில மொழி மூலமும் பட்டப்பின் கல்வியினை கொழும்பு பல்கலைக்கழகத்திலும், மேலும் மனித உரிமைகள் டிப்ளோமா, உயர் தேசிய ஆங்கில டிப்ளோமா மற்றும் ஆங்கிலத்தில் தேசிய சான்றிதழினையும் பெற்றதுடன் தனது உயர் தரத்தினை சம்மாந்துறை முஸ்லிம் மகா வித்தியாலயத்திலும் கற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Image
 பிள்ளையான் அவர்களுக்கு கிழக்கு வாழ் முஸ்லிம் மக்களின் சார்பாக ஒர் பகிரங்க மடல்..   கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களுக்கு கிழக்கு வாழ் முஸ்லிம் மக்களின் சார்பாக ஒர் பகிரங்க மடல் கடந்த  ஈஸ்டர் தாக்குதல் சம்மந்தபட்ட  பாராளுமன்ற விவாதத்தின் போது தாங்கள் கூறிய கருத்து முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் கவலையை தோற்றுவித்துள்ளது நீங்கள் கூறிய கருத்தின் தாக்கம் பெரும்பான்மை மக்களின் மத்தியில் முஸ்லிம்கள் மீதான சந்தேக கண்ணோட்டத்தை மேலும் வலுப்பெற செய்துள்ளது மட்டுமல்லாமல் இனவாத சக்திகளின் கருத்துக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையிலேயே அமைந்துள்ளது தீவிரவாத சிந்தனை கொண்ட சில இளைஞர்கள் அல்லது சிறு குழு கலிபா ஆட்சியை நாட்டில் உருவாக்கும் சிந்தனையில்  என்ற வார்த்தை பிரயோகம்  பெரும்பான்மை பாமர மக்களிடத்தில் பாறிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று உங்களுக்கு தெரியாமல் இருக்காது என்று நினைக்கிறேன் முஸ்லிம் சமூகத்தின் மீது திட்டமிடப்பட்டு கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாத செயல்பாடுகள் பற்றியும் நல்லாட்சியை உருவாக்க சர்வதேச சக்திகளின் வியூகம் பற்றியும் நன்கு தெரிந்...
Image
 ராஜபக்ச தலைமையில் யொவுன் சீல சமாதி வேலைத்திட்டத்தம்... தமிழ் முஸ்லிம் சமூக இளைஞர் யுவதிகள், சமயத் தலைவர்களும் கலந்து சிறப்பிப்பு.    ஹஸ்பர் ஏ ஹலீம்_ இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களுடைய எண்ணக்கருவிற்கமைய   புத்த சமய விவகார அமைச்சின்  ஒருங்கிணைப்பில் ஒழுக்க விழுமியங்களைப் பேணுகின்ற  இளைஞர்  சமூகம் ஒன்றை கட்டியெழுப்பும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட  யொவுன்  சீல சமாதி வேலைத்திட்டத்தின் மூன்றாவது வேலைத்திட்டம்  (28)திருகோணமலை சேருவில ரஜமகா விகாரையில் நடைபெற்றது. தமிழ் முஸ்லிம் சமூகங்களை சேர்ந்த  இளைஞர் யுவதிகள், சமயத் தலைவர்கள் கலந்து சிறப்பித்தமை விஷேட அம்சமாகும். இந்நிகழ்வில் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமாகிய கபில நுவன்  அத்துகோரல, பிரதேச அரசியல் தலைமைகள், மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன   பாண்டிகோராள, சேருவில  பிரதேச செயலாளர் பி.ஆர்.ஜயரத்ன, இளைஞர் யுவதிகள் என பலரும் கலந்து சிறப்பித்த...
Image
 நான் ஒரு வியாபாரி எங்கே இன்வெஸ்ட் பண்ணா எங்கே லாபம் வரும் என்று எனக்கு தெரியும்.   நாங்கள் தராசு சின்னத்தில் இருந்துகொண்டே அந்த இருபதுக்கு  வாக்களித்து அந்த கட்சியின் பங்காளிக் கட்சியாக நாம் இருக்கிறோம். அப்படி நாங்கள் ஜனாதிபதியிலிருந்து எங்களுடைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிலிருந்து , எங்களுடைய பசில் ராஜபக்ச வெளியிலிருந்து, எங்களுடைய பவித்ரா வன்னியாரச்சி அமைச்சிலிருந்து அதே போன்று பல மதகுரு தலைவர்கள், தூதரகங்கள்  இருபது முப்பது சந்திப்புகளை வைத்து இந்த பிரச்சினைக்குத் தீர்வை கேட்டு காலை பிடிக்காமல் கெஞ்சினோம். இறுதியில் இறைவனின் முயற்சியின் எப்போ ஆரம்பித்ததோ எப்ப நடக்குமோ ஒன்றரை மாதத்தில் இது முடிவு வந்தது. நான் ஒரு வியாபாரி எங்கே இன்வெஸ்ட் பண்ணா எங்கே லாபம் வரும் என்று எனக்கு  தெரியும். அந்த வகையில்தான் இந்த அரசாங்கத்திற்கு ஆதரவளித்து தொடர்ந்து  அந்த அரசாங்கத்துடன் இணைந்து   எங்களுடைய ஜனாதிபதியையும் ஆதரித்து, எங்களுடைய பிரதமரையும் ஆதரித்து  பசில் ராஜபக்ஷ   வழிகாட்டலில் என்னுடைய அரசியலை நான் செய்து கொண்டிருக்கிறேன்.