Posts

6 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு நாணயங்களுடன் துபாய் செல்ல முயற்சித்த இலங்கையர்கள் கட்டுநாயக்கவில் கைது.

Image
 6 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு நாணயங்களுடன் துபாய் செல்ல முயற்சித்த இலங்கையர்கள் கட்டுநாயக்கவில் கைது. கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு நாணயங்களுடன்  டுபாய் நோக்கிப் பயணிக்க முயற்சித்த 7 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்க போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் நேற்று(24) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களிடம் இருந்து அமெரிக்க டொலர், யூரோ மற்றும் ஸ்ரேலிங் பவுன் என்பன கைப்பற்றப்பட்டதாக சுங்கப் பிரிவின் பேச்சாளர் சுதந்த சில்வா தெரிவித்தார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

உனக்கு இது பிடிக்குமா?" மோசடி மன்னன் சுகேஷ் நடிகையுடனான உரையாடல் கசிந்தது

Image
 உனக்கு இது பிடிக்குமா?" மோசடி மன்னன் சுகேஷ் நடிகையுடனான உரையாடல் கசிந்தது சுகேஷ் வழக்கு விவகாரத்தில் அதிரடி திருப்பங்களும், புதுப்புது தகவல்களும் தினந்தோறும் வெளியாகி வருகிறது. கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சுகேஷ் சந்திரசேகர். அகில இந்திய அளவில் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவர்கள் மற்றும் ஆட்சியாளர்களுடன் நட்பு இருப்பதாக கூறி இவர் தொழில் அதிபர்கள், அரசியல் பிரபலங்கள் உள்பட பலரை ஏமாற்றி பண மோசடி செய்ததாக புகார்கள் உள்ளன. அ.தி.மு.க. பிளவுபட்டிருந்தபோது இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக டி.டி.வி.தினகரன் தரப்புக்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார். அவர் பலரிடம் மோசடியில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து இருப்பதாக மத்திய அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுகேஷ் சந்திரசேகரின் சென்னை, பெங்களூரு பங்களாக்களில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத 2 கிலோ தங்கம், ரூ.82.5 லட்சம் ரொக்கம், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 16 சொகுசு கார்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இத...

மட்டு உப்போடை பகுதி ஆற்றில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது

Image
 மட்டு உப்போடை பகுதி ஆற்றில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது  மட்டக்களப்பு உப்போடை ஆற்றில் உருக்குலைந்த நிலையில் நேற்று மீட்கப்பட்டவர் மட்டக்களப்பு மோகோந்திரன் வீதியைச் சேர்ந்த 37 வயதுடைய தோமஸ் காந்தமூர்த்தி செந்தூரன் என அவரது மனைவியினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.  குறித்த நபர் கடந்த 20 ம் திகதி திங்கட்கிழமை கல்லடி பாலத்தில் இருந்து ஆற்றில் ஒருவர் குதித்து தற்கொலை செய்துள்ளதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து பொலிசார் அப்பகுதியில் தேடினர்.  இந்த நிலையில்அன்றைய தினம் காந்தமூர்த்தி செந்தூரன்  வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் காணாமல் போயுள்ளார் அவரை அவரது மனைவி உறவினர் தேடிவந்த நிலையில்  நேற்று உப்போடை பகுதி ஆற்றில் கரையொதிங்கிய சடலத்தை அவரது மனைவி பார்த்து அது தனது கணவர் என அடையாளம் காட்டியுள்ளனர். இதனையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது  இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

டிசம்பரில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் அதிகரிப்பு

Image
 டிசம்பரில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் அதிகரிப்பு டிசம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில் 47,120 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கை வந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த வருடம் ஜனவரி முதல் இதுவரை 152,109 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலா மையமாக மேம்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த ஊக்குவிப்பு வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டுக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில், 2022 ஆம் ஆண்டு 'இலங்கையை காண்போம்' என்ற ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. உலகளாவிய மேம்பாட்டுத் திட்டத்துக்கு அமைவாக இந்த பிரகடனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள்மூலம் இலங்கையை மேம்படுத்துவது பெரிதும் ஊக்குவிக்கப்படவுள்ளதுடன், மேலும் இந்த ஒருங்கிணைந்த ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் வெளிநாடுகளில் சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து துறை தொடர்பான சர்வதேச மாநாடுகள் மற்றும் கண்காட்சிகளில் செயல்படுத்தப்படும். சமூக ஊடகங்கள் மூலமாக இலங்கை  தொடர்பான ஊக்குவிப்பு வேலைத்த...

இன்று பகல் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்ததில் ஒருவர் காயம்.

Image
 இன்று பகல் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்ததில் ஒருவர் காயம். சிவனொளிபாத மலை ஹட்டன் வீதியில் எஹலக்கனுவ பகுதியிலுள்ள உணவகம் ஒன்றில் பணிபுரியும் இளைஞர் ஒருவர் சமையல்  எரிவாயு அடுப்பு  வெடித்ததில் காயமடைந்த நிலையில் மஸ்கெலியா பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நல்லத்னிய பொலிஸார் தெரிவித்துள்ளனா். இன்று (23) பிற்பகல் 12.30 மணியளவில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்துடன் குறித்த உணவகத்திலுள்ள ஏனைய  ஊழியர்கள் காயமடைந்த நபரை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனா். காயங்களுக்குள்ளானவர் இரத்தினபுரி, குருவிட்ட, படதொட்ட பிரதேசத்தை சேர்ந்தவர் 18 வயதுடையவர்  எனவும், அவர் தொர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாகவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனா். இவர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக  மாவட்ட வைத்திய அதிகாரி எச். இர்ஜாட் தெரிவித்தார்.

நுவரெலியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

Image
 நுவரெலியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு! நுவரெலியா உடப்புஸ்ஸலாவை பிரதான வீதியில் இன்று காலை 11.45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிசார் தெரிவித்தனர். நுவரெலியாவை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளில் ஒன்று ஹாவாஎலிய பகுதியிலிருந்து நுவரெலியாவை நோக்கி சென்ற வேன் ஒன்றுடன் மோதுண்டு பின் நுவரெலியா மாநகரசபைக்கு சொந்தமான கழிவு நீர் ஏற்றும் பவுசர் ஒன்றின் பின் பகுதியில் மோதுண்டும் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த (46) வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் உயிரிழந்த நபரின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அடையாளம் காண்பதற்காக வைக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நுவரெலியா போக்குவரத்து பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்

அயல்வீட்டு இளைஞனுடன் காதல்…கர்ப்பம்; வீட்டிற்குள்ளேயே யாருக்கும் தெரியாமல் குழந்தை பிரசவித்து கொன்று வீசிய யுவதி: சினிமா பாணி சம்பவம்!

Image
 அயல்வீட்டு இளைஞனுடன் காதல்…கர்ப்பம்; வீட்டிற்குள்ளேயே யாருக்கும் தெரியாமல் குழந்தை பிரசவித்து கொன்று வீசிய யுவதி: சினிமா பாணி சம்பவம்! அயல்வீட்டு இளைஞனுடனான காதல், கர்ப்பமாக மாறியதை, வீட்டிற்கு தெரியாமல் மறைத்து, வீட்டிற்குள்ளேயே பிரசவம் பார்த்து, குழந்தையை கொன்ற யுவதியினால் கேரளாவே அதிர்ந்து போயுள்ளது. கேரளாவின், திருச்சூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை, பூங்குன்றம் எம்எல்ஏ சாலை கால்வாயில் சிசுவின் சடலமொன்று காணப்பட்டது. பையொன்றில் சுற்றப்பட்ட நிலையில் சடலம் காணப்பட்டது. பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், போலீசார் உடலை கைப்பற்றி, விசாரணையை முடித்து, மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையின் ஒரு பகுதியாக, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், இரு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து பிளாஸ்டிக் பையொன்றை போட்டு விட்டு சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தது. இதையடுத்து திருச்சூர் வரடியத்தை சேர்ந்த மனுவல் மற்றும் அவரது நண்பர் அமல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. ...