Posts

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்களுடன் வந்த நந்தன் வேலுப்பிள்ளை என்பவரால் ஊடகவியலாளர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

Image
  வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்களுடன் வந்த நந்தன் வேலுப்பிள்ளை என்பவரால் ஊடகவியலாளர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி மட்டக்களப்பு வந்தாறுமூலையில்  ஊடகவியலாளர் செய்தி சேகரிக்கச் சென்றவேளை தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இலட்சுமனன் தேவப்பிரதீபன் (நாராயணன்) என்ற ஊடகவியலாளரே இன்று காலை (26) தாக்குதலுக்குள்ளாகி செங்கலடி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது வந்தாறுமூலை சந்தைப் பகுதியில் விபத்தொன்றில் உயிரிழந்த சமூகசேவையாளர் அமரர் க.பாஸ்கரன் என்பவரது பெயரில் உறவினர்களால் ஞாபகார்த்தமாக 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 'பேருந்து தரிப்பிடம்' கட்டப்பட்டு உத்தியோக பூர்வமாக மக்கள் பாவனைக்குட்பட்டிருந்தனர்;. இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர். கே.துரைராஜசிங்கம் செங்கலடி பிரதேச சபை,இலங்கை போக்குவரத்து சபை ,வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகிய திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் இலங்கை செஞ்சிலுவை சங்க மட்டக்களப்பு பணிப்பாளர...

மரபணு மாற்றங்களுடன் பரவி வரும் ஒமிக்ரோன் !

Image
  மரபணு மாற்றங்களுடன் பரவி வரும் ஒமிக்ரோன் ! ஒமிக்ரோன் மாறுபாடு மரபணு மாற்றங்களுக்கு உட்பட்டு பரவி வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாக வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நதீகஜானகே தெரிவித்துள்ளார் . கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே வைத்திய நிபுணர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய மரபணு மாற்றங்களின் ஊடாக ஒருமுறை தொற்றுக்கு உள்ளான நபருக்கு மீண்டும் ஒமிக்ரோன் வைரஸ் தொற்று ஏற்படும் வாய்ப்பு காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தற்போதைய நிலைமைக்கு அமைய சாதாரண நபர் ஒருவருக்கு ஒரு பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படுவது போதுமானது என்றாலும் அபாயமிக்க தரப்பில் காணப்படும் நபர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பூஸ்டர் தடுப்பூசிகளின் எண்ணிக்கை பரிந்துரைகளுக்கு அமைய மாறுபடக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Image
  நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு நாட்டில் கொரோனா தொற்று உறுதியான நோயாளிகளில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 608,475 ஆக அதிகரித்துள்ளது. இன்று மேலும் 249 நோயாளிகள் மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று 1,286 நோயாளிகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நாட்டில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 643,072 ஆக அதிகரித்துள்ளது. 18,455 பேர் தற்போது நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 16,142 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வன்செயல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனினால் நட்டஈட்டு காசோலைகள் வழங்கிவைப்பு!

Image
  வன்செயல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனினால் நட்டஈட்டு காசோலைகள் வழங்கிவைப்பு! பயங்கரவாத வன்செயல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் வணக்கஸ்தலங்களுக்கான நட்டஈட்டு காசோலை வழங்கும் நிகழ்வு இன்று (26) திகதி செங்கலடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இளப்பீடுகளுக்கான தேசிய செயலகத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் பயங்கரவாத வன்செயல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் வணக்கஸ்தலங்களுக்கான நஸ்டஈட்டுக்கான காசோலைகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டுவரும் நிலையில் செங்கலடி ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகளில் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் வணக்கஸ்தலங்களுக்கான நஸ்ட ஈட்டுக் காசோலைகள் வழங்கும் நிகழ்வானது ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் அவர்கள் கலந்துகொண்டிருந்ததுடன், பாதிக்கப...

உக்ரைன் தலைநகரில் கடும் சண்டை; ஆயுதங்களை அனுப்புகிறது பிரான்ஸ்!

Image
 உக்ரைன் தலைநகரில் கடும் சண்டை; ஆயுதங்களை அனுப்புகிறது பிரான்ஸ்! உக்ரைனை ஆக்கிரமிக்கும் நோக்கில் முன்னேறி வரும் ரஷ்ய துருப்புக்களை எதிர்கொள்ள ஏதுவாக ஆயுதங்கள் மற்றும் ஆயுத தளபாடங்களை பிரான்சில் அனுப்பிவைத்துள்ளது. இந்த ஆயுதங்கள் உக்ரைன் நோக்கி வந்துகொண்டிருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமீா் ஸெலென்ஸ்கி இன்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை அதிகாலை பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோனுடன் பேசியதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இன்று சனிக்கிழமை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் போர் நீடிக்கும். அதற்கு நாம் தயாராக வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். பாரிய ரஷ்ய படையெடுப்பை எதிர்கொள்ளும் உக்ரைனுக்கு கூடுதல் பாதுகாப்பு உதவியை அமெரிக்கா வழங்கும் என்று அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது. உக்ரைனுக்கு மேலதிக ஆதரவை வழங்குவதற்கான சிறந்த வழியை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். நாங்கள் உக்ரைனுக்கு ஆதரவாக இருப்போம். உக்ரைனுக்கு என்ன வழிகளில் உறுதியான ஆதரவை வழங்க முடியும் என தொடர்ந்து ஆராயப்பட்டு வருகிறது என பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஜான...

இலங்கைக்கு படையெடுத்து வந்த 4000 உக்ரைன் பிரஜைகள்

Image
 இலங்கைக்கு படையெடுத்து வந்த 4000 உக்ரைன் பிரஜைகள் இலங்கையில் சுமார் 4000 உக்ரைன் சுற்றுலா பயணிகள் தங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவிக்கின்றது. இந்த சுற்றுலா பயணிகள் 30 நாட்களுக்கான விஸாவை பெற்றே நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக அமைச்சு கூறுகின்றது. எனினும், உக்ரைனில் தற்போது ஏற்பட்டு யுத்த சூழ்நிலைக்கு மத்தியில், நாடு திரும்ப முடியாத உக்ரைன் பிரஜைகளுக்கு விஸா கால எல்லையை அதிகரித்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் இராணுவம் ஆயுதங்களை கீழே போட போவதில்லை.. நாங்கள் சரணடையவும் மாட்டோம் ; உக்ரைன் ஜனாதிபதி அறிவிப்பு

Image
 உக்ரைன் இராணுவம் ஆயுதங்களை கீழே போட போவதில்லை.. நாங்கள் சரணடையவும் மாட்டோம் ; உக்ரைன் ஜனாதிபதி அறிவிப்பு உக்ரைன் இராணுவம் ஆயுதங்களை கீழே போட போவதில்லை என உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமீா் ஸெலென்ஸ்கி அறிவித்துள்ளாா். காணொளியொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளாா். “போலிகளை நம்பாதீர்கள். நாங்கள் எங்கள் நாட்டைப் பாதுகாக்கிறோம். சரணடைய முடியாது. யாரும் தங்கள் ஆயுதங்களைக் கீழே போடப் போவதில்லை” என்று குறிப்பிட்டுள்ளாா்.