Posts

சட்ட விரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு சன்மான தொகை அதிகரிப்பு!

Image
  சட்ட விரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு சன்மான தொகை அதிகரிப்பு! சட்ட விரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளை தேடும் நடவடிக்கைகளுக்கு உதவும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அது தொடர்பில் தகவல்களை பெற்றுத் தரும் தரப்பினருக்கு வழங்கப்படும் சன்மான தொகையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சட்ட விரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகள் புழக்கத்தில் இருப்பது, இந்த நாட்களில் பல குற்றச் செயல்களுக்கு முக்கிய காரணமாக இருப்பதால் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொது பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலின் படி, சட்ட விரோத துப்பாக்கிகள் மற்றும் கைக்குண்டுகளை தேடும் நடவடிக்கைகளுக்கு உதவும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் தனிநபர் தகவல் வழங்குநர்களுக்கு வழங்கப்படும் சன்மான தொகையை அதிகரிக்க  தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், இன்று ஞாயிற்றுக்கிழமை (25) முதல் அடுத்த மாதம் 31ஆம் திகத...

மரண தண்டனை கைதி சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முயன்றபோது கைது!

Image
  மரண தண்டனை கைதி சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முயன்றபோது கைது! வெலிக்கடை சிறைச்சாலையில் சிறைச்சாலை அதிகாரியின் சீருடைக்கு நிகரான சீருடையை அணிந்து கைதியொருவர் தப்பிச் சென்றபோது  கைதுசெய்யப்பட்டுள்ளார். வெலிக்கடை சிறைச்சாலையில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் இன்று (25) மத நிகழ்வுக்காக சிறைச்சாலையில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டபோது அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்போது சந்தேகமடைந்த சிறைச்சாலை அதிகாரிகள் கைதியை துரத்திச் சென்று, மருதானை புகையிரத நிலையத்தில் கைதி ரயிலில் ஏறும்போது கைதுசெய்து, வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு வந்துள்ளனர்.  42 வயதுடைய பன்னல பிரதேசத்தை சேர்ந்த நபரே தப்பிச் செல்ல முயன்றபோது கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் கொலைக் குற்றச்சாட்டின் கீழ் கடந்த 2015ஆம் ஆண்டு கம்பஹா மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி என தெரிவிக்கப்படுகிறது.  இச்சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அத்தியட்சகரின் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஸ்டிக்கர் இல்லாத மது போத்தல்களை விற்றால் பார் உரிமம் இரத்து!

Image
  ஸ்டிக்கர் இல்லாத மது போத்தல்களை விற்றால் பார் உரிமம் இரத்து! ஸ்டிக்கர் இல்லாமல் மதுபானம் விற்கும் கடைகளின் மதுபான உரிமத்தை ரத்து செய்ய தேவையான நடவடிக்கை எடுக்கக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை வரி செலுத்தாமல் ஏய்ப்பு செய்யும் உற்பத்தி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்யவும் கலால் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேசியப் பொருளாதாரம் மற்றும் இயற்பியல் திட்டமிடல் தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு இத்தகைய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. பாரியளவிலான மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து பெற வேண்டிய வரிகளை விரைவாக அறவிடுமாறு கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கம பணிப்புரை விடுத்துள்ளார். பல வருடங்களாக கலால் திணைக்களத்தின் வருமானம் அதிகரிக்கவில்லை என மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். மதுவின் விலை உயர்வினால் மட்டும் வருமானம் குறைந்துள்ளதை அவதானிக்காமல், இந்நாட்டில் உள்ள பாரிய மதுபான உற்பத்தி நிறுவனங்களிடம் இருந்து சரியான முறையில் வரி வசூலிக்கப்படுவதிலும் கவனம் செலுத்துவது அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், இலங்கை கலால் திணைக்...

பொருளாதாரத்தில் நலிவடைந்திருக்கும் கிராமப்புற மக்களை அரசு கவனிக்க வேண்டும் : நாமல்!

Image
  பொருளாதாரத்தில் நலிவடைந்திருக்கும் கிராமப்புற மக்களை அரசு கவனிக்க வேண்டும் : நாமல்! கிராமங்களில் பொருளாதாரத்தில் சோர்ந்துபோய் உணவு கிடைக்காமல் தவிக்கும் மக்கள் தொடர்பில் அரசாங்கம் அதிக அக்கறையுடன் செயற்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கிராமப்புற மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகளுக்கு அரசியல் கேலி, விமர்சனங்களுக்கு ஆளாகாமல் அரசு பதில் அளிக்க வேண்டும் என்றார். கடந்த 23ம் திகதி பல கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், வர்த்தகர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தெரிவித்தார். “.. உள்ளூர் தொழில்முனைவோர் மற்றும் வணிகர்கள் மற்றும் விவசாயிகள் மற்றும் மீனவர்களைப் பாதுகாப்பதில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்த வேண்டும். IMF மற்றும் சர்வதேச விவகாரங்களில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாக நான் குற்றம் சாட்டவில்லை. ஆனால் இன்று விவசாயிகள் மிகுந்த சிரமத்தில் உள்ளனர். பல இடங்களில் அரிசி விலை சரிந்துள்ளது. . மேலும், சோளம் மற்றும் பிற உள்ளூர் பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சி...

மது விற்பனை குறைவு : வருமானத்தை எட்டமுடியாத நிலையில் கலால் திணைக்களம்!

Image
  மது விற்பனை குறைவு : வருமானத்தை எட்டமுடியாத நிலையில் கலால் திணைக்களம்! விலை அதிகரிப்பு காரணமாக மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை குறைவடைந்துள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆகவே இவ்வருடம் வரி வருமான இலக்குகளை தம்மால் அடைய முடியவில்லை என்றும் கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கம தலைமையில் தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீக திட்டமிடல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு கூட்டத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது. இங்கு, கலால் திணைக்களத்தினால் இவ்வருடம் எதிர்பார்க்கப்பட்ட வருமானம் 217 பில்லியன் ரூபாய் எனவும், ஜூன் மாதம் வரை 72.985 பில்லியன் ரூபாய் மாத்திரமே வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். மதுபானத்தின் விலை அதிகரிப்பால் மது உற்பத்தி மற்றும் விற்பனை குறைந்துள்ளதாகவும் இதனால் எதிர்பார்த்த வருமானத்தை எட்ட முடியவில்லை என்றும் இங்கு வருகை தந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். மேலும் கலால் திணைக்களம் 110 வருட வரலாற்றைக் கொண்ட நிறுவனம் என்றும், இந்த நிறுவனம் டிஜிட்டல் மயமாக்கப்படாமல் இருப்பது பலவீனம் என்றும் மஹிந்தானந்த அளுத்கம சுட்டி...

வங்கி முகாமையாளருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையில் முறுகல் : கைதான வாடிக்கையாளருக்கு விளக்கமறியல்!

Image
வங்கி முகாமையாளருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையில் முறுகல் : கைதான வாடிக்கையாளருக்கு விளக்கமறியல்! அரச வங்கியொன்றின் முகாமையாளருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து குறித்த வாடிக்கையாளர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொகவந்தலாவை நகரில் அமைந்துள்ள அரச வங்கியொன்றுக்கு சென்ற குறித்த வாடிக்கையாளருக்கும் வங்கி முகாமையாளருக்கும் இடையில் வியாழக்கிழமை (22) பிற்பகல் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. வங்கி முகாமையாளரின் அறிவிப்பை அடுத்து பொகவந்தலாவை பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று சந்தேகநபரை கைது செய்ய முற்பட்ட போது அங்கு கூடியிருந்தவர்கள் கடும் எதிர்ப்பை வெளிட்டனர். இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் ஹட்டன் நீதிவான் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (23) ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்மை குறிப்பிடத்தக்கது.

மேன்முறையீடுகளின் அடிப்படையில் அஸ்வெசும நலப் பயனாளிகள் பட்டியல் திருத்தம் செய்யப்படும் : ஷெஹான் சேமசிங்க!

Image
  மேன்முறையீடுகளின் அடிப்படையில் அஸ்வெசும நலப் பயனாளிகள் பட்டியல் திருத்தம் செய்யப்படும் : ஷெஹான் சேமசிங்க! மேன்முறையீடுகள் மற்றும் முறைப்பாடுகளின் அடிப்படையில் அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் பெறுபவர்களின் பட்டியல் திருத்தப்படும் என பதில் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இன்று உறுதியளித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய சேமசிங்க, மேன்முறையீடுகள் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டு வருவதாகவும், எந்தவொரு தனிநபரும் மேன்முறையீடு அல்லது முறைப்பாடு ஒன்றை தாக்கல் செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளார். மேல்முறையீடுகள் மற்றும் புகார்களின் அடிப்படையில், பதிவேட்டில் திருத்தம் செய்யப்படும் என்றார். விண்ணப்பங்கள் மற்றும் சரிபார்ப்பின் அடிப்படையில் தற்போது பட்டியல் தொகுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் ஜூலை மாதம் முதல் கொடுப்பனவுகள் வழங்கப்படுவதற்கு முன்னர் திருத்தங்களுக்கு இன்னும் இடமுள்ளதாகவும் தெரிவித்தார். 2024 ஆம் ஆண்டுக்கான பதிவேடுக்காக ஒகஸ்ட் மாதம் மீண்டும் ஒருமுறை பட்டியல் மதிப்பாய்வு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை 148 பில்லியன் ...