Posts

யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

Image
  யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு! #Sri Lanka   #Jaffna   #Food யாழ்ப்பாணத்தில் உள்ள உணவுச்சாலைகள், வெதுப்பக விற்பனை நிலையங்களுக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனினால் முக்கிய அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது.  யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரத்தினால் நேற்று (28) விசேட ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள உணவுச்சாலைகள், சிற்றுண்டி சாலைகள், வெதுப்பக விற்பனைகள் போன்றவற்றினை ஒழுங்குபடுத்தும் நோக்கோடு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், சுகாதார வைத்திய அதிகாரிகள், பொதுச்சுகாதார பரிசோதகர்கள், யாழ்ப்பாண வர்த்தக சம்மேளன பிரதிநிதிகள், யாழ்ப்பாண சுற்றுலாதுறை அமைப்பின் பிரதிநிதிகள், மாநகர ஆணையாளர், பிரதேச சபை நகர சபை செயலாளர்கள், உணவுச்சாலை நடத்துபவர்கள் ஆகியோரின் பங்கு பற்றலுடனும் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மேலதிக அரசாங்க அதிபர்கள் , மாவட்ட உதவிச் செயலாளர் , பிரதேச செயலாளர்கள் ஆகியோரின் பங்குபற்றலுடனும் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.  இக்கலந்துரையாடலில் க...

அந்தமான் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Image
  அந்தமான் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! #world news   #Earthquake   #Lanka4 அந்தமான் நிக்கோபார் தீவுகள் அருகே இன்று (29.07) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.   குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளதாக இந்திய நிலநடுக்கவியல் தேசிய மையம் தெரிவித்துள்ளது.   பூமியின் மேற்பரப்பில் இருந்து 69 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் நிலைகொண்டதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுக்கூர்ந்தார் பிராயன் உடக்வே ஆண்டகை!

Image
  முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுக்கூர்ந்தார் பிராயன் உடக்வே ஆண்டகை! #Sri Lanka   #Mullaitivu   #Lanka4 முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு திருத்தந்தையின் திருத்தூது பிரதிநிதி பேரருட் திரு. பிராயன் உடக்வே ஆண்டகை அஞ்சலி செலுத்தினார். குறித்த நிகழ்வு நேற்று (28.07) இடம்பெற்றது.

நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது

Image
  நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது #Sri Lanka   #Arrest இரண்டு காணிகளை போலி பத்திரம் மூலம் சுவீகரித்தமை மற்றும் போலி பத்திரத்தை சமர்ப்பித்து 15 இலட்சம் ரூபா மோசடி செய்த இரண்டு சம்பவங்களில் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை நேற்று முன்தினம்(27) பொலிஸார் கைது செய்துள்ளனர்.  சந்தேக நபர் மாளிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  கைது செய்யப்பட்ட போது வெளிநாட்டு கடவுச்சீட்டு, 11 ஓட்டுநர் உரிமங்கள், 04 தேசிய அடையாள அட்டைகள், பல்வேறு பொலிஸ் நிலையங்கள், நீதிமன்றங்கள், வைத்தியசாலைகள், பிரதேச செயலகங்கள், பல்வேறு பாடசாலைகள் மற்றும் சிறைச்சாலைகள், பல்வேறு வங்கிகள், மதிப்பீட்டு திணைக்களம், வருமான வரி திணைக்களம், மோட்டார் போக்குவரத்து திணைக்களம், இலங்கை போக்குவரத்து சபை பல்வேறு அதிபர்கள், காணி பதிவாளர்கள், திருமண பதிவாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள், வைத்தியர்கள் மற்றும் புகையிரத திணைக்களத்தின் பல்வேறு துறைகளில் 300 போலியான உத்தியோகபூர்வ முத்திரைகள் சந்தேகநபரின் வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  சந்தேகநபர் 28ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்ற...

அவுஸ்ரேலியாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் விபத்து : நால்வர் மாயம்!

Image
  அவுஸ்ரேலியாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ஹெலிகொப்டர் விபத்து : நால்வர் மாயம்! #Australia   #Accident   #Lanka4 குயின்ஸ்லாந்து கடற்கரையில் அவுஸ்ரேலியாவிற்கு சொந்தமான ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளான நிலையில், நான்கு பேர் காணாமல்போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்த     MRH-90 தைப்பான்   என்ற ஹெலிகொப்டர் ஒன்றே இவ்வாறு விபத்தில் சிக்கியதாக பாதுகாப்பு அமைச்சர்  ரிச்சர்ட் மார்ல்ஸ் இன்று (29.07)  தெரிவித்துள்ளார்.  "இந்த சம்பவம் குறித்து நான்கு விமானப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.  காணாமல்போனவர்களை தேடும் பணி நேற்றில் இருந்து தொடர்ச்சியாக 12 மணிநேரமாக நடைபெற்று வருவதாக அவர் அறிவித்துள்ளார். 

2015 ஷியா மசூதி குண்டுவெடிப்பு - குவைத்தில் இலங்கையர் ஒருவருக்கு மரண தண்டனை

Image
  2015 ஷியா மசூதி குண்டுவெடிப்பு - குவைத்தில் இலங்கையர் ஒருவருக்கு மரண தண்டனை #Sri Lanka குவைத்தில் ஐந்து கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.  இந்தக் குழுவில் இலங்கை போதைப்பொருள் வியாபாரி ஒருவரும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.   குறித்த இலங்கையர் களுத்துறையில் வசிக்கும் 44 வயதுடையவர்.  அவர்களில் 2015 ஆம் ஆண்டு ஷியா மசூதியில் குண்டுவெடித்து 27 பேரைக் கொன்ற ஒரு நபரும் ஒருவர். மற்ற மூன்று கைதிகளும் கொலை வழக்கில் தண்டனை பெற்றனர்.

மன்னார் மாவட்டத்திலுள்ள இரண்டு பாடசாலைகளுக்கு விற்றமின் மருந்து நன்கொடை

Image
மன்னார் மாவட்டத்திலுள்ள இரண்டு பாடசாலைகளுக்கு விற்றமின் மருந்து நன்கொடை #Sri Lanka   #Mannar   #School   #Lanka4   #இலங்கை   #லங்கா4   #விற்றமின்   #vitamin   இலங்கையைச் சேர்ந்த நோர்வேயில் வசித்து வரும் வைத்திய கலாநிதியொருவரால் மன்னார் மாவட்டம் குஞ்சுக்குளம் பகுதியில் உள்ள இரண்டு பாடசாலையைச் சேர்ந்த சுமார் 200 மாணவர்களுக்கு விற்றமின் மருந்துகள் வழங்கி அவர்களது போசாக்கை மேம்படுத்த உதவியுள்ளார்.  இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சென்று நோர்வே நாட்டில் வசித்து வருகின்ற வைத்திய கலாநிதி எட்வெட் எல்மர் தனது குடும்பத்துடன் இலங்கைக்கு வருகை தந்த நிலையில் குறித்த மனிதாபிமான பணியை முன்னெடுத்துள்ளார்.  குறித்த பின் தங்கிய கிராமத்தில் உள்ள குறித்த இரு பாடசாலைகளுக்குச் சென்று மாணவர்களுக்கான உடல் பரிசோதனை மேற்கொண்டதோடு அவர்களுக்கு தேவையான விற்றமீன் அடங்கிய மருந்துகளை வழங்கி வைத்துள்ளார். இந்நிகழ்வில் மடு வைத்திய அதிகாரிகள் வைத்தியர் டெனி மற்றும் ஞா.குணசீலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.