Posts

போதையில் ஈபிள் கோபுரத்தில் தூங்கிய அமெரிக்க சுற்றுலா பயணிகள்

Image
  போதையில் ஈபிள் கோபுரத்தில் தூங்கிய அமெரிக்க சுற்றுலா பயணிகள் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் இருக்கும் ஈபிள் கோபுரம் உலக அதிசயங்களில் ஒன்றாக திகழ்கிறது. இங்கு ஆண்டு முழுவதும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சுற்றிப் பார்க்க குடும்பத்துடன் வருகிறார்கள். இந்தநிலையில் அமெரிக்காவை சேர்ந்த 2 சுற்றுலாப் பயணிகள், நேற்று முன்தினம் ஈபிள் கோபுரத்தை சுற்றி பார்க்க வந்திருந்தனர். அவர்கள் இருவரும் அன்று இரவு மது அருந்திவிட்டு பாதுகாப்பையும் மீறி, ஈபிள் கோபுரத்தின் உச்சிக்கு சென்று விட்டனர்.  மது போதையில் இருந்த அவர்கள் திரும்பி வரும் வழியில் அங்கேயே தூங்கி விட்டனர். மறுநாள் காலை 9 மணிக்கு ஈபில் கோபுரத்தை திறக்கும் முன்பு அங்கு வந்த பாதுகாப்பு காவலர்கள் அங்கு 2 பேர் தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.  அவர்களை எழுப்பி விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் அமெரிக்கர்கள் என்பதும் அதிக மதுபோதையில் இருந்ததால் அங்கேயே தூங்கியதும் தெரியவந்தது. குடிபோதையில் இருந்த அமெரிக்கர்கள் இரவு 10:40 மணியளவில் நுழைவு டிக்கெட்டுகளை வாங்கி மேலிருந்து கீழே செல்லும் போது பாதுகாப்பு தடைகளைத் தாண்டி கு...

“சனல் - ஐ” குறுகிய கால அடிப்படையில் லைக்காவிற்கு வழங்கப்பட்டுள்ளது - பந்துல!

Image
  “சனல் - ஐ” குறுகிய கால அடிப்படையில் லைக்காவிற்கு வழங்கப்பட்டுள்ளது - பந்துல! ”சனல் - ஐ” யினை லைக்கா நிறுவனத்திற்கு குறுகிய கால அடிப்படையில் குத்தகைக்கு விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் நஸ்டத்தில் இயங்கிவரும் “சனல்-ஐ” யினை குத்தகைக்கு விடுவதற்கான கேள்விபத்திர அறிவிப்பை வெளியிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இலங்கை ரூபாவாஹினிகூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சனல்ஐயை விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குநிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்வதற்கு நீண்டகால அடிப்படையில் குத்ததைகக்கு விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள அவர் இயக்குநர் சபை எடுத்ததீர்மானத்தின் அடிப்படையில் சனல்- ஐ யினை குறுகிய கால அடிப்படையில் லைக்கா நிறுவனத்திற்கு வழங்கதீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும்தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமைச்சரவையின் அனுமதியை பெறுவதற்கு அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்த போதிலும் சனல்ஐ நஸ்டத்தில் இயங்குவதை தடுப்பதற்கான நடவடிக்கை என்பதால்அமைச்சரவையின் அனுமதி தேவையில்லை என தெரிவிக்கப்பட்டதாக பந்துலகுணவ...

அம்பாறையில் குப்பைகளை உண்ண தினந்தோறும் வரும் யானைகள் : பொதுமக்களின் உடமைகளுக்கும் சேதம்!

Image
  அம்பாறையில் குப்பைகளை உண்ண தினந்தோறும் வரும் யானைகள் : பொதுமக்களின் உடமைகளுக்கும் சேதம்! (பாறுக் ஷிஹான்) குப்பைகளை உண்ண வருகின்ற  யானைகள் அருகில் உள்ள விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் விவசாயிகளை அச்சுறுத்தி வருகின்றன. அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட அஸ்ரப் நகர் பள்ளக்காட்டுப் பிரதேசத்தில்  கொட்டப்படும்  குப்பைகளை தினந்தோறும் 100 க்கும் மேற்பட்ட யானைகள் வருகை தந்து உண்டு வருகின்றன. சில வேளை  அருகில் உள்ள பொதுமக்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவிப்பதுடன் விவசாய நிலங்களையும் கபளீகரம் செய்கின்றன. மேற்படி பகுதியில்  தினமும்  காரைதீவு ,கல்முனை ,அக்கரைப்பற்று, நிந்தவூர், உள்ளிட்ட பிரதேசங்களில் இருந்து  குப்பைகள் வாகனங்கள் மூலம் கொண்டுவரப்பட்டு   கொட்டப்படுகின்றன. இதனால் மலைபோல் குவிந்துள்ள குறித்த குப்பைகளை யானைகள் தினமும் உண்ண வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் அம்பாறை  பிராந்தியத்தில் அன்றாடம் சேகரிக்கப்படும் திண்மக்கழிவுகள் அநேகமானவை மேற்குறித்த இடத்திற்கே கொட்டப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த காலங்க...

புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டதால் குளமாகிப்போன கல்முனை, பிச்சிபிலாவடி வீதி - மக்கள் கவலை! !

Image
  புனரமைப்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டதால் குளமாகிப்போன கல்முனை, பிச்சிபிலாவடி வீதி - மக்கள் கவலை! ! கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிச்சிபிலாவடி அல்லது வைத்தியர் றிஸ்வி வீதி புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், வீதி செப்பனிடும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அசெளகரியங்களை எதிர்கொள்வதாக கவலையோடு தெரிவிக்கின்றனர். வீதி செப்பனிடும் பணிகள் கைவிடப்பட்டதால்  அவ்விடம் வெள்ள நீர் தேங்கும் இடமாக மாறியுள்ளது. இதனால் சிறுவர்கள், பாடசாலை மாணவர்கள், பெரியோர்கள் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வீதி புனரமைப்பு வேலைத்திட்ட பணிகள் அரசாங்க நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (11)  அப்பகுதி அரசியல்வாதி ஒருவர் கொடுத்த  அழுத்தம் காரணமாக பணிகள் யாவும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  அத்தோடு, குறித்த வீதி தோண்டப்பட்டவாறு  பாதியில் திருத்த வேலைகள் கைவிடப்பட்டுள்ளது. இதனால் அவ்வீதியை பயன்படுத்த முடியாமல் தாம் சிரமப்படுவதாக அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மகஜர்கள...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தொடரும் மரணங்கள் பிரசவத்தின் போது சிசு தாய் மரணம்!

Image
  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தொடரும் மரணங்கள் பிரசவத்தின் போது சிசு தாய் மரணம்! (மண்டூர் ஷமி) காத்தான்குடி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கிரான்குள பிரதேசத்தைச் சேர்நத் தாய் அவரின் பிறந்த சிசு மரணமடைந்த சம்பவம் மட்டு போதனா வைத்தியசாலையில் 14ம் திகதி  இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிரான்குள பிரதேசத்தைச் சேர்ந்த (35) வயதுடைய இருபிள்ளைகளின் தாயாரும் ஆசிரியையுமான சின்னத்தம்பி சுபாஸ்ஜினி மற்றும் அவரின் இரு நாள் பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்தவர்களாவார்கள். குறித்த குடும்பப் பெண் கர்ப்பம் தரித்து சத்திர சிகிச்சை மூலம் பெறப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி கடந்த எட்டாம் திகதி மரணமான நிலையில் தாய் ஆபத்தான நிலையில் அதிதீவிர சிகிச்சைப்பரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த (14) திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுதலுக்கமைவாக சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்ட பின்னர் உடற்கூற்று பரிசோத...

சுவிஸில் கசாப்புக்கடைக்கு செல்லவிருந்த மாடு தப்பியதால் அதனை சுட்டுக்கொன்ற பொலிஸார்

Image
  சுவிஸில் கசாப்புக்கடைக்கு செல்லவிருந்த மாடு தப்பியதால் அதனை சுட்டுக்கொன்ற பொலிஸார் #Police   #Switzerland   #Lanka4   #Gun_Shoot   #சுவிட்சர்லாந்து   #லங்கா4   #Cow திங்கட்கிழமை காலை 9.30 மணிக்குப் பிறகு சுவிட்சர்லாந்தின் லிஸ்ஸில் உள்ள பைல்ஸ்ட்ராஸ்ஸில் உள்ள இறைச்சிக் கடையில் இருந்து காளை ஒன்று தப்பிச் சென்றதாக பெர்ன் மாநில காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதன்படி காளையை இறக்கும் போது டிரெய்லரிலிருந்து தன்னை விடுவித்து பூங்கா பாதையின் திசையில் அது ஓடியது. உடனடியாக அனுப்பப்பட்ட அவசர சேவைகள்  மூலம், இறுதியாக பிர்கன்வெக்கில் காளையை கண்டுபிடிக்க முடிந்தது.  கோபமான காளையை அமைதிப்படுத்திப் பிடிக்க முடியாததால், பொறுப்பான விளையாட்டுக் காவலரின் ஆலோசனைக்குப் பிறகு பெர்ன் மாநில காவல்துறையின் இரண்டு துப்பாக்கிச் சூடுகளால் அது கொல்லப்பட்டது.  இந்தசெயல்பாட்டின் காலத்திற்கு பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டது.

17 ஆம் திகதி முதல் பாடசாலை விடுமுறை

Image
  17 ஆம் திகதி முதல் பாடசாலை விடுமுறை அரச மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான முதற்கட்ட விடுமுறை ஆகஸ்ட் 17 ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. இதனை, கல்வி அமைச்சு இன்று (15) அறிவித்துள்ளது. அதன்படி இரண்டாம் கட்ட பாடசாலை தவணை ஆகஸ்ட் 28ம் திகதி மீண்டும் ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.