காலநிலை மாற்றம் தொடர்பில் சாணக்கியன் எம்.பி. வௌியிட்ட விடயம்
.jpg)
காலநிலை மாற்றம் தொடர்பில் சாணக்கியன் எம்.பி. வௌியிட்ட விடயம் காலநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு உலக நாடுகளின் ஆதரவோடு வட கிழக்கில் ஆட்சி அமைத்த தமிழரசின் உள்ளூராட்சி மன்றங்கள் தயார் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். "ரெய்சினா - Raisina" மாநாடு ஜப்பான் டோக்கியோவில் இடம்பெற்றது. இலங்கை சார்பாக விசேட அழைப்பின் பெயரில் கலந்துகொண்ட போதே பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, "இவ் மாநாடானது, காலநிலை மாற்றம், பசுமை நிதி, மற்றும் சுற்றுச்சூழல் நீதி போன்ற முக்கியமான பிரச்சினைகளில் சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் ஒரு முக்கியமான மேடையாக காணப்படுகின்றது. இந்த நிகழ்வை அப்சர்வர் ஆராய்ச்சி அறக்கட்டளை (ORF), ORF அமெரிக்கா, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு வங்கி (JBIC) மற்றும் கெய்சாய் டோயுகாய் (ஜப்பான் வர்த்தக நிர்வாகிகள் சங்கம்) இணைந்து நடத்தினார்கள். அங்கு ஆற்றப்பட்ட எமது நாடு தொடர்பிலான எனது விசேட உரையானது. இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கில் காலநிலை மாற்றம் தொடர்பிலும் அதற்குரிய நடவடிக்கைகள...