கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு விமல் கடும் எதிர்ப்பு.



கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கு எதிராக அரசியல் கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என அமைச்சர் விமல்வீரவன்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.



அரசாங்கம் கிழக்கு முனையத்தை இந்திய நிறுவனத்திடம் ஒப்படைப்பது என தீர்மானித்தால் அது குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்த பேச்சுவார்த்தைகளிற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளும் முன்வரவேண்டும்என அமைச்சர் வேண்டுகொள் விடுத்துள்ளார் என ஐலண்ட் தெரிவித்துள்ளது.



கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்திய நிறுவனத்திடம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் அடுத்தவாரம் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்தால் தீர்க்ககரமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டியதன் அவசியத்தை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார் என ஐலண்ட் தெரிவித்துள்ளது.



இன்று இது தொடர்பில் அமைச்சர் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளின் தலைவரின் கூட்டம் இடம்பெறவுள்ளது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !