பௌத்த மதகுரு சாராயம் குடித்துவிட்டு பொலிசாருடனும், மக்களுடனும் கலாட்டா செய்துள்ளார். இந்த சம்பவம் இன்று (30.03.2021) காலி - ஜின்தோட்ட விகாரையில் நடைபெற்றுள்ளது.
அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு. அம்பாறை மாவட் டத்தில் சேதனப் பசளையைப் பாவித்து அப்பிள் பழங்களை உற்பத்தி செய்யலாம் என்பதை அட்டாளைச்சேனையில் ஓய்வுபெற்ற கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோ கஸ்தர் ஏ.எல். அப்துல் கபூர் நிரூபித்துள்ளார். அட்டாளைச்சேனையிலுள்ள குடி யிருப்பு நிலமொன்றில் "மாசான்" எனும் அப்பிள் கொடியை நாட்டி யுள்ளார். அத்துடன் உப உணவுப் பயிர்ச்செய்கை, வீட்டு மட்டதிலான கால்நடை வளர்ப்பு, சிறுசிறு மரக்கறிப்பயிர்ச் செய்கை போன்றவைக ளிலும் இவர் ஈடுபட்டுள்ளார். சுபீட்சத்தின் நோக்கு எண்ணக் கருவுக்கு அமைவாக “சேதனப் பசளையை பாவிப்பதன்மூலம் "நஞ் சற்ற உணவை உட்கொள்வோம்" என்ற தொனிப் பொருளால் மிகவும் கவரப்பட்டகபூர், தனதுமுயற்சி புது மையானதாக இருக்கவேண்டுமென நினைத்தார். அவ்வாறே "மாசான்" எனும் ஒருவகை அப்பிள் மரக்கன்றுகள் சிலவற்றை நாட்டினார். தற்போது அப்பிள் மரம் பழங்களைக் காய்க்க தொடங்கியது. கடந்த திங்கட்கி ழமை இவர் ஒரு மரத்தில் மாத்திரம் சுமார் 75 க்கு மேற்பட்ட காய்களைப் பறித்துள்ளார். இதேவேளை இவர் சிறந்த வாச னைத்திரவியங்களை உற...
மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் ஒன்றை திங்கட்கிழமை (04) வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர். லியோபோகான் (LEOPOCON Sri Lanka) எனப்படும் இலாப நோக்கற்ற அமைப்பு எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவின் அடிப்படையிலேயே சிறுத்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மாதுரு ஓயா தேசிய பூங்காவில் இந்த சிறுத்தையின் சடலம் கிடந்ததாகவும், இவ் வருடத்தின் நடுப்பகுதி வரை 14 சிறுத்தைகள் வேட்டையாடப்பட்டுள்ளது என லியோபோகான் என தெரிவித்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு கொத்மலை, கட்டுகித்துல பகுதியில் ஒரு வயதான ஆண் சிறுத்தை இறந்து கிடந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்) நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் 75 வருட பூர்த்தியை முன்னிட்டு, பாடசாலையின் அதிபர் ஏ.அப்துல் கபூரின் ஆலோசனையின் பிரகாரம் பழைய மாணவர்களுக்காக, பாடசாலையின் பழைய மாணவர் சங்கம் பவளவிழா கட்டுரை மற்றும் கவிதைப் போட்டிகளை நடாத்தவுள்ளது. இப்போட்டிகளில் முதலிடம் பெறும் வெற்றியாளர்களுக்கு பாடசாலையின் முன்னாள் அதிபர் மர்ஹூம் சீ.ஓ. லெஸ்தகீர் ஞாபகார்த்த விருதுகள் வழங்கப்படவுள்ளமை விசேட அம்சமாகும். அத்தோடு, முதலிடம் பெறும் ஆக்கங்கள் பவள விழா சிறப்பு மலரிலும் இடம்பெறவுள்ளன. அது மட்டுமல்லாமல் பாடசாலை மீளத்திறக்கப்பட்டதன் பின்னர் பாடசாலை மாணவர்களுக்கிடையேயும் பழைய மாணவர் சங்கத்தினால், பாடசாலையின் தமிழ் இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் போட்டி நிகழ்ச்சிகள் நடாத்தப்படவுள்ளன. திறந்த போட்டிகள் தொடர்பான விபரங்கள் பின்வருமாறு: கவிதை மற்றும் கட்டுரைப் போட்டிக்கான பரிசுகளாக முதலாமிடம் - 10,000 ரூபாய், இரண்டாமிடம் - 5,000 ரூபாய், மூன்றாமிடம்- 3,000 ரூபாய், ஆக்கங்கள் தரமானதாக அமையுமிடத்து பெறுமதிமிக்க மூன்று ஆறுதல் பரிசில்கள் வழங்கப்படும். பொது நிபந்தனைகள்: போட்...
Comments
Post a Comment