80 ஹெக்டயரில் பெரும்போக நெற்செய்கை ஆரம்பம். #அம்பாறை

 80 ஹெக்டயரில் பெரும்போக நெற்செய்கை ஆரம்பம். #அம்பாறை

 



பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)

அம்பாறை மாவட்டத்தில் சுமார் 80 ஹெக்டயர் விவசாய

நிலப்பரப்பில் பெரும்போக நெற்செய்கை பண்ணப்படவுள்ளதாக மாவட்ட விவசாயப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.கலீஸ் தெரிவித்துள்ளார்.


மாவட்டத்திலுள்ள டீ.எஸ். சேனநாயக்க சமுத்திரம் மற்றும் ஏனைய நீர்தாங்கு நிலைகளின் விவசாயிகளுக்கு தேவையான நீர் காணப்படுவதுடன் மாவட்டத்திலுள்ள சகல விவசாயக் காணிகளிலும் நெற்செய்கை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அக்கரைப்பற்று, ஒலுவில், அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, நிந்தவூர், நாவிதன்வெளி போன்ற பிரதேசங்களில் தற்போது விவசாயிகள் விதைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.


விவசாயிகளுக்கு தேவையான அனைத்து ஆலோசனைகளும் விவசாய திணைக்களத்தினால் வழங்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் மே மாத இறுதிக்குள் விதைப்பு நடவடிக்கைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற ஆலோசனைகளும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.


-

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021