திருமணத்தில் கலந்து கொண்ட 12 ஆண்கள் 8 பெண்களுக்கு சிக்கல்..

 



தனிமைப்படுத்தல் விதிகளை மீறி திருமணத்தை நடத்திய 20 பேர்

 தனிமைப்படுத்தப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.


பாணந்துறை வடக்கு பல்லேமுல்ல பகுதியில் நேற்று (29) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 12 ஆண்கள் 8 பெண்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


சுகாதார விதிமுறைகளை மீறி திருமண நிகழ்வில் பங்கேற்றமை தொடர்பில் குறித்த நபர்கள் 14 நாட்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்த பின்னர், பொலிஸாரால் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாக அவர் கூறினார்.    

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !