சில மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு 2 வார பயணத் தடை விதிக்க காரணம் என்ன... விளக்குகிறது அரசு.



ஜூலை 1 முதல் சில வளைகுடா நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு

 2 வார பயணத் தடை விதிக்க முக்கிய காரணம்,

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த அதிக எண்ணிக்கையிலான பயணிகளுக்கு PCR சோதனையில் COVID-19 கொரோனா தோற்று இருந்தது கண்டறியப் பட்டுள்ளதாக

அரசாங்கம் தெரிவித்துள்ளது.



திங்களன்று (28) வந்த கிட்டத்தட்ட 110 பயணிகள் சோதனையின் போது கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்ததாக அமைச்சரவை இணை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லா நேற்று செவ்வாய்க்கிழமை (29) தெரிவித்தார்.


இது மிகவும் கவலை அளிக்கிறது. அவை பி.சி.ஆர் சோதனை முடிவுகள் கொரோனா தொற்று உள்ளதாக வருகின்றன.


எனவே தேசிய வளைகுடா பணிக்குழு மற்றும் சுகாதார நிபுணர்களின் ஆலோசனையின் பேரில் சில வளைகுடா நாடுகளில் இருந்து வருவதை தடை செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்தார்.


பயணத் தடையின் கீழ், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, ஓமான், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் உள்ளடங்கும்.



இருப்பினும், மேற்கூறிய நாடுகளில் இருந்து பயணிக்கும் பயணிகள் ( Transit ) இலங்கையில் தரையிறங்க அனுமதிக்கப்படுவார்கள்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !