74 வருடங்களில் எதிர்கொண்டிராத மோசமான பொருளாதார நெருக்கடியை நாடு எதிர்கொண்டுள்ளது.

 



நாடு சுதந்திரமடைந்ததன் பின்னர் இதுவரை எதிர்கொண்டிராத மாபெரும் பொருளாதார க்கடிக்கு முகங்கொடுத்துள்ளதுடன், அரச ஊழியர்களின் சம்பளங்களை செலுத்திய பின்னர், அரசாங்கத்திடம் மிகவும் சொற்ப அளவு வரிப் பணம் மாத்திரமே எஞ்சியிருப்பதாக வர்த்தகத் துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.




"2020 ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் வருமானம் 1,373 பில்லியன் ரூபாயாக பதிவாகியிருந்தது. அரச ஊழியர்களின் சம்பளத்தை செலுத்த அதில் 794 பில்லியன் ரூபாய் பயன்படுத்தப்பட்டது. ஓய்வூதியம் பெறுவோரின் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு 258 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டது" என அவர் கூறியிருந்தார்.


சம்பளம். ஓய்வூதியம் ஆகியவற்றைச் செலுத்துவதற்கு 1,052 பில்லியன் ரூபாய் மாத்திரமே செலுத்தப்பட்டது. அரசாங்கத்தின் மொத்த வருமானம் ரூ. 1,373 பில்லியனாகும். இந்த வரிப்பணத்திலிருந்தே அரச ஊழியர்களின் சம்பளம் செலுத்தப்படுகின்றது.


சுடன்கள் மீதான வட்டியை செலுத்துவதற்கு 980 பில்லியன் ரூபாய்களும், மானியங்கள் மற்றும் மாற்றங்களுக்கான 717 பில்லியன் ரூபாய்களும் செலவிடப்படுகின்றன என அவர் மேலும் கூறினார்.


திரட்டப்படும் 1.373 பில்லியன் ரூபாயிலிருந்து 1,052 பில்லியன் ரூபாய் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகளுக்கு வழங்கப்பட்டதன் பின்னர், 321 பில்லியன் ரூபாய் மாத்திரமே எஞ்சியுள்ளது என அவர் மேலும் கூறினார்.


இந்நிலையில் நாட்டின் பொருளாதாரம் கடந்த 74 வருடங்களில் எதிர்கொண்டிராத மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !