சவுதி, கட்டார், UAE உட்பட 6 மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பயணிகள் இலங்கைக்கு வருவது தற்காலிக தடை.

 


6 மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பயணிகள் இலங்கைக்கு 

வருவதை தடை செய்ய COVID-19 தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு நிலையம் (NOCPCO) முடிவு செய்துள்ளது.



அதன்படி, கட்டார் , ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, ஓமான், பஹ்ரைன் மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் கடந்த 14 நாட்களில் பயணம் மேற்கொண்டிருந்த பிரஜைகள் இலங்கையில் இறங்க அனுமதிக்கப்படமாட்டார்கள் .



இதற்கான பணிப்புரை அனைத்து விமான நிறுவனங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.



ஜூலை முதலாம் திகதி நள்ளிரவு முதல் ஜூலை 13 ஆம் தேதி நள்ளிரவுவரை இந்த கட்டுப்பாடு அமுலில் இருக்கும்.


ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஆறு மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் பயணிகளை தடை செய்வதற்கான தீர்மானம் இன்று காலை எடுக்கப்பட்டது.


இருப்பினும், மேலதிக ஆராய்வுக்காக இந்த திட்டம் நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் அதன்பின்னர் தெரிவித்தனர்.


இந்த திட்டத்திற்கு இன்றுமாலை COVID-19 தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு நிலையம் (NOCPCO) அனுமதி அளித்துள்ளது.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021