பிறைந்துரைச்சேனையின் பிரபல போதை வியாபாரி உட்பட நால்வர் கைது

 பிறைந்துரைச்சேனையின் பிரபல போதை வியாபாரி உட்பட நால்வர் கைது




வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிறைந்துரைச்சேனைப் பிரதேசத்தில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த பிரபல ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் வியாபாரியும் இப்பிரதேசத்தில் போதை விற்பனையின் பிரதான சூத்திரதாரி என நம்பப்படும் நபர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 


இன்று 2021.07.29ம் திகதி வியாழக்கிழமை

பிற்பகல் 02.30 மணியளவில் பிறைந்துரைச்சேனை, அஸ்லம் ஸ்டோர் வீதியில் வைத்தே 33 வயதுடைய குறித்த பிரதான சூத்திரதாரியும் 20, 22,2 3 வயதுடைய மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

இவர்களிடமிருந்து 2 கிராம் 350 மில்லி கிராம் ஹெரோயின் மற்றும் 3 கிராம் 20 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதோடு, 16,000 ரூபா பணமும் கைப்பட்டப்பட்டுள்ளது.


இவர்கள் நால்வரும் பிறைந்துரைச்சேனைப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


பிரதான சூத்திரதாரி ஏற்கனவே 16 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டவர் என்பதோடு, கடந்த வாரம் இவரின் மைத்துனர் 8 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய வாழைச்சேனை பொலிஸாரோடு இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போதே பல்வேறு பிரயத்தனத்துக்கும், போராட்டத்துக்கு மத்தியில் தப்பிச் செல்ல முயன்ற இவர்கள் நால்வரும் மடக்கிப் பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !