அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 800 கொள்கலன்களில் 400 விடுவிக்கப்பட்டன.

 அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 800 கொள்கலன்களில் 400 விடுவிக்கப்பட்டன.

 


கொழும்புத் துறைமுகத்தில் தேங்கியுள்ள அத்தியாவசிய 

பொருட்கள் அடங்கிய 800 கொள்கலன்களில் 400 கொள்கலன்கள் இதுவரையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


டொலர் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக குறித்த கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியிருந்தன.


எவ்வாறாயினும் குறித்த கொள்கலன்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் அண்மையில் தெரிவித்திருந்தார்.


இதற்கமைய, கொழும்புத் துறைமுகத்தில் தேங்கியிருந்த 800 கொள்கலன்களில் 400 கொள்கலன்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


அமைச்சரவை உறுதியளித்ததை போன்று அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிப்பதற்கு தேவையான டொலரை மத்திய வங்கி வழங்கினால், அதனை முழுமையாக ஒரு வாரத்திற்குள் விடுவிக்க முடியும் என இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021