அக்கரைப்பற்றில் கைக்குண்டு மீட்பு

 அக்கரைப்பற்றில் கைக்குண்டு மீட்பு


நேற்று 29.11.2021ம் திகதி திங்கட்கிழமை பகல் 1 மணியளவில் அக்கரைப்பற்றில் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.


வாழைச்சேனை காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைவாக அக்கரைப்பற்று விஷேட அதிரடிப்படை மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரோடு இணைந்து

மேற்கொண்ட நடவடிக்கையின் போதே இக்குண்டு கைப்பற்றப்பட்டுள்ளது. 


கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட குறித்த கைக்குண்டு 82 ரகத்தைச் சேர்ந்தது என்பதுடன், குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரால் செயலிழக்கச் செய்யப்பட்டது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !