வெள்ள நீரால் கிட்டங்கி வீதி மூழ்கியது - போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமம்

 வெள்ள நீரால் கிட்டங்கி வீதி மூழ்கியது - போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமம் 











பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)


அம்பாரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடைமழை காரணமாக நாவிதன்வெளி பிரதேச செயலகப்பிரிவிலுள்ள கல்லோயா குடியேற்றக் கிராமங்களையும் கல்முனை நகரையும் இணைக்கும் கிட்டங்கி வீதியின் மேலாக வெள்ள நீர் பரவ ஆரம்பித்துள்ளதுடன், இவ்வீதியூடாக போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச மக்கள் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.


தினமும் விவசாயிகள், அலுவலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் நாளந்தம் பயணிக்கும் இவ்வீதியில் வெள்ள நீர் பரவி வருவதால் கல்லோயா குடியேற்றக் கிராமங்களிலுள்ள சவளக்கடை, அன்னமலை, சொறிக்கல்முனை, 4, 5, 6, 12ஆம் கொளனிகள், நாவிதன்வெளி போன்ற பிரதேச மக்கள் பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் தமது அன்றாடப் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.


இவ்வீதிக்கான நிரந்தர பாலம் அமைக்குமாறு நீண்டகாலமாக பிரதேச மக்களினால் விடுக்கப்படும் கோரிக்கை இதுவரைக்கும் எந்த அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


இதே வேளை, அம்பாறை மாவட்டத்தில் சில இடங்களில் பல நாட்களாகப் பெய்து வரும்   மழையினால் அதிகமான மழை நீர் ஓட்டமில்லாமல் வயற்பகுதிகளில் தேங்கி நிற்பதனால் விதைக்கப்பட்ட நெற்பயிர்கள்    அழுகும் நிலைக்குள்ளாகியுள்ளதாக பிரதேச விவசாயிகள் கவலை தெரிவிக்கிறனர்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !