வைத்தியர்கள் பயணித்த வாகனம் விபத்து
வைத்தியர்கள் பயணித்த வாகனம் விபத்து
யாழ்ப்பாணம் அரியாலை, மாம்பழம் சந்திக்கு அருகில் நேற்று (25) இரவு குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில் யாழில் இருந்து வேகமாக பயணித்த குறித்த வாகனம் மாம்பழம் சந்திக்கு அருகில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீடொன்றின் மதிலுடன் மோதி தடம்புரண்டது.
அதனையடுத்து அவ்விடத்தில் கூடியவர்கள் விபத்தில் சிக்கிய வாகனத்தில் இருந்தவர்களை மீட்டெடுத்தனர். அவர்கள் சிறு காயங்களுக்குள்ளாகி இருந்தனர்.
அதேவேளை, அவர்கள் வாகனத்திலிருந்த வைத்திய இலட்சினை ஸ்ரிக்கரை கிழித்ததாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். விபத்துக்குள்ளானவர்கள் தனியார் விருந்தினர் விடுதியில் விருந்துபசார நிகழ்வில் கலந்து கொண்டு திரும்பும் போது விபத்துக்குள்ளாகியிருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவித்தனர்.
பின்னர் வாகனத்துடன் அங்கிருந்து விபத்துக்குள்ளானவர்கள் செல்ல முற்பட்ட போது , அங்கிருந்தவர்கள் அதற்கு அனுமதிக்காது பொலிஸாருக்கு அறிவித்தனர்.
அதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் , விபத்துக்குள்ளான வாகனத்தை பொலிஸ் நிலையம் எடுத்து சென்றதுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
Comments
Post a Comment