யாழில் பெண்கள் உட்பட பலர் அதிரடி கைது

 

யாழில் பெண்கள் உட்பட பலர் அதிரடி கைது


கோப்பாய் - யோகபுரம் பகுதியில் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யோகபுரம் பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு செல்லாததால் நீதிமன்றினால் அவர்களுக்கு எதிராக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டது.

நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட பிடிவிறாந்தினை நடைமுறைப்படுத்தி அவர்களை கைது செய்வதற்காக 2 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் நேற்றைய தினம் யோகபுரம் பகுதிக்கு சென்றனர்.

அதன் போது அங்கிருந்த சிலர், பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததுடன், அவர்கள் மீது தாக்குதலையும் மேற்கொண்டனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக நடவடிக்கையை முன்னெடுத்த பொலிஸார் , இரு பெண்கள் உள்ளிட்ட 6 பேரை கைது செய்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021