சாய்ந்தமருதில் குண்டுகளை வெடிக்க வைத்து உயிரிழந்தவர்களின் சடலங்களை நாளை தோண்ட நடவடிக்கை.
சாய்ந்தமருதில் குண்டுகளை வெடிக்க வைத்து உயிரிழந்தவர்களின் சடலங்களை நாளை தோண்ட நடவடிக்கை.
கல்முனை- சாய்ந்தமருதில் குண்டுகளை வெடிக்க
வைத்து உயிரிழந்த உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் சடலங்கள் தோண்டி எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மரபணு பரிசோதனைகளுக்காக குறித்த சடலங்கள் நாளை தோண்டி எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சாரா என்ற புலஸ்தினி மஹேந்திரனின் மரபணுவை ஆராய்வதற்காகவே இவ்வாறு 2019ஆம் ஆண்டு சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் உயிரிழந்தோரின் உடற்பாகங்கள் தோண்டப்படவுள்ளன.
Comments
Post a Comment