இலங்கைக்கு 700 மில்லியன் உதவி? வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட கருத்தை உலக வங்கி மறுத்துள்ளது.

 

இலங்கைக்கு 700 மில்லியன் உதவி? வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட கருத்தை உலக வங்கி மறுத்துள்ளது.

 


உலக வங்கி இலங்கைக்கு புதிய நிதி உதவி வழங்குவதாக வெளியிடப்பட்ட கருத்தை மறுத்துள்ளது.

அடுத்த சில மாதங்களுக்குள் சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்குவதாக உலக வங்கி உறுதியளித்துள்ளது என வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட கருத்தை உலக வங்கி மறுத்துள்ளது.

எனினும் இது தொடர்பில் இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் ஃபரிஸ் எச்.ஹடட் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

உலக வங்கி இலங்கைக்கு அவசரகால கடன் அல்லது புதிய கடன்களை வழங்கி ஆதரவளிக்க திட்டமிட்டுள்ளதாக சமீபத்திய ஊடக அறிக்கைகள் தவறாக கருத்து வெளியிட்டள்ளன.

உலக வங்கி இலங்கை மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளதுடன், பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் நாட்டின் வளர்ச்சியை மீட்டெடுப்பதற்காக பொருத்தமான கொள்கைகளுக்கு ஆலோசனை வழங்குவதில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற அபிவிருத்தி பங்காளிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றது.

மேலும் உணவு, கல்வி, விவசாயம் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க இலங்கை அரசுக்கு உதவுவதற்காக, ஏற்கனவே ஒப்புதல் வழங்கப்பட்ட திட்டங்களை மறுபயன்பாட்டுக்கு கொண்டுவருகிறோம்.

ஆனால், முறையான பொருளாதார கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை இலங்கைக்கு நிதி உதவி வழங்கும் திட்டம் இல்லை” என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !