ஹோமாகம தீ விபத்து சம்பவம்: 19 வயது யுவதியும் உயிரிழப்பு!

 ஹோமாகம தீ விபத்து சம்பவம்: 19 வயது யுவதியும் உயிரிழப்பு!



ஹோமாகம மாகம்மன பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் கடுமையான தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த யுவதியும் உயிரிழந்துள்ளார்.


கடந்த 25 ஆம் திகதி இந்த தீ விபத்து இடம்பெற்றிருந்த நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் இரண்டு மகள்கள் படுகாயமடைந்திருந்தனர்.


இதில் தாய் மற்றும் தந்தை கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் ஒரு மகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் மற்றைய மகள் கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.


இந்நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 19 வயதுடைய யுவதி இன்று மதியம் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


உயிரிழந்த யுவதியின் தாய், தந்தையின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !