பாணின் விலையை 60 ரூபாவினாலும், சிற்றுண்டிகளின் விலைகளை 30 ரூபாவினாலும் அதிகரிக்க நேரிடும் !

 

பாணின் விலையை 60 ரூபாவினாலும், சிற்றுண்டிகளின் விலைகளை 30 ரூபாவினாலும் அதிகரிக்க நேரிடும் !



நாளாந்தம் அதிகரித்து வரும் கோதுமை மாவின் விலையை மூன்று நாட்களுக்குள் கட்டுப்படுத்தாவிட்டால், ஒரு இறாத்தல் பாணின் விலை 60 ரூபாவினாலும், பனிஸ், கறி பனிஸ் போன்ற சிற்றுண்டிகளின் விலைகளை 30 ரூபாவினாலும் அதிகரிக்க நேரிடும் என என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டொலர் நெருக்கடி காரணமாக சந்தையில் மாவின் விநியோகம் பாதியளவு குறைந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார் தற்போது கோதுமை மா கிலோ ஒன்று 350 ரூபா வரை அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் சந்தையில் மாவிற்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விலையில் மாவை வாங்கி பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் பட்சத்தில் தற்போது 190 ரூபாவாக உள்ள பாண் இறாத்தல் ஒன்றின் விலை 250 ரூபாவாக உயரும் எனவும், பனிஸ் ஒன்றின் விலையை 100 ரூபாய் வரை அதிகரிக்க நேரிடும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021