மொட்டு கட்சியின் ஆதரவாளர்களை பேர வாவியில் தள்ளிய பெண்ணிற்கு விளக்கமறியல்!

 

மொட்டு கட்சியின் ஆதரவாளர்களை பேர வாவியில் தள்ளிய பெண்ணிற்கு விளக்கமறியல்!


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் குழுவொன்றை கடந்த மே 9 ஆம் திகதி பேர வாவியில் தள்ளிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு நேற்று கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சந்தேக நபரை அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்த உத்தரவிடுமாறு பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதற்கமைய சந்தேகநபரை எதிர்வரும் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அத்துடன், அன்றைய தினம் அவரை அடையாள அணிவகுப்பில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !