காட்டு யானைகளை விரட்ட வருடாந்தம் ரூ. 2,800 மில்லியன் செலவு!
காட்டு யானைகளை விரட்ட வருடாந்தம் ரூ. 2,800 மில்லியன் செலவு!
யானை – மனித மோதல்கள் அதிகரித்து வருவதையடுத்து யானைகளை கலைப்பதற்காக தேவைப்படும் யானை வெடிகளுக்காக அரசாங்கம் வருடாந்தம் 2,800 மில்லியன் ரூபாவை செலவிட்டு வருவதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வருடாந்தம் அதற்கென 14 இலட்சம் யானை வெடிகள் தேவைப்படுவதாகவும் அவை உள்ளூர் பட்டாசு உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்யப்படுவதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்தது.
காட்டு யானைகள் விவசாய காணிகள் மற்றும் கிராமங்களுக்குள் பிரவேசிக்கும் வேளையில் அவற்றை அங்கிருந்து கலைப்பதற்காக வனஜீவராசிகள் திணைக்களம் மக்களுக்கு இலவசமாகவே யானை வெடிகளை வழங்கி வருகிறது.
தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ..!

Comments
Post a Comment