80 கொக்கெய்ன் உருண்டைகளை விழுங்கியிருந்த நிலையில் இலங்கை வந்த உகண்டா பிரஜை கைது!

 80 கொக்கெய்ன் உருண்டைகளை விழுங்கியிருந்த நிலையில் இலங்கை வந்த உகண்டா பிரஜை கைது!



ஐந்து கோடி ரூபா பெறுமதியான கொக்கெய்ன் உருண்டைகளை விழுங்கிய நிலையில் நாட்டிற்கு வந்த உகண்டா பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.


43 வயதான சந்தேகநபர் சுமார் 80 கொக்கெய்ன் உருண்டைகளை விழுங்கியிருந்த நிலையில், உடலிலிருந்து இதுவரை 17 கொக்கெய்ன் உருண்டைகள் அகற்றப்பட்டுள்ளன.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் எம்மோடு இணைந்திருங்கள் ..!



Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !