வாகனங்களின் விலை சடுதியாக குறைவடைந்து வருகிறது : இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர்
வாகனங்களின் விலை சடுதியாக குறைவடைந்து வருகிறது : இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர்
சந்தையில் வாகனங்களின் விலை சடுதியாக குறைவடைந்து வருவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரென்ஜிகே தெரிவித்துள்ளார்.
அதிகரித்த வட்டி வீதம், எரிபொருள் விலை உயர்வு மற்றும் உதிரிபாகங்களுக்கான தட்டுப்பாடு உள்ளிட்ட பல பிரச்சினைகள் காரணமாக வாகனங்களின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், வாகனங்களின் விலை குறைவடைந்த போதிலும் உதிரிபாகங்கள், வாகன திருத்தல் மற்றும் பழுதுபார்த்தல் ஆகிய கட்டணங்கள் சடுதியாக அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
Comments
Post a Comment