போதைப்பொருளை ஒழிப்பதற்கு சிங்கப்பூரில் அமுல்படுத்தப்படும் சட்டங்கள் இலங்கையிலும் அமுல்படுத்தப்பட வேண்டும் : சஜித் பிரேமதாச !

 

போதைப்பொருளை ஒழிப்பதற்கு சிங்கப்பூரில் அமுல்படுத்தப்படும் சட்டங்கள் இலங்கையிலும் அமுல்படுத்தப்பட வேண்டும் : சஜித் பிரேமதாச !


போதைப்பொருள் பரவலை ஒழிப்பதற்கு சிங்கப்பூரில் அமுல்படுத்தப்படும் சட்டங்கள் இலங்கையிலும் உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நேற்று நாவுலவில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாடும் பாடசாலை முறையும் போதைப்பொருளால் நிரம்பியுள்ளதாகவும், நாட்டின் சட்ட முறைமைகள் திருத்தப்பட்டு நீதித்துறை உடனடியாக பலப்படுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

டிஜிட்டல் தொழில்நுட்ப முறைகளை நோக்கி கல்வி முறையை மாற்றியமைத்து புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்.

பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்வதற்குப் பதிலாக அதிகாரிகள் பாடசாலை மாணவர்களின் பைகளை சோதனையிடும் அதேவேளை இலங்கை போதைப்பொருள் மையமாக மாறி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிறைச்சாலைகளுக்குள் இருந்து போதைப்பொருள் கடத்தல் இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் உள்ள புகையிலை நிறுவனங்களிடமிருந்து அரசாங்க அதிகாரிகள் பல்வேறு சலுகைகளை பெற்று வருவதாகவும், எனவே சிகரெட்களுக்கு வரி விதிக்காமல் பொதுமக்களுக்கு வரி விதிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !