இந்த மாத தொடக்கத்தில் 123 ரயில்கள் இரத்து : ரயில் நிலைய அதிபர்கள் சங்கம்!

 

இந்த மாத தொடக்கத்தில் 123 ரயில்கள் இரத்து : ரயில் நிலைய அதிபர்கள் சங்கம்!


பல்வேறு காரணங்கள் மற்றும் ஊழியர் பற்றாக்குறையால் 123 ரயில் சேவைகளை இந்த மாத தொடக்கத்தில் இரத்து செய்ய ரயில்வே திணைக்களம் தீர்மானித்ததாக இலங்கை ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் (SLRSMU) தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று நாட்களுக்குள் 30 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டதைத் தவிர, ரயில் சாரதி உதவியாளர்கள் இல்லாததால் அதிக எண்ணிக்கையிலான ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

புகையிரத சேவைகள் இயக்கப்படாமையால் புகையிரத பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜனவரி 28ஆம் தேதி 27 பயணிகள் ரயில்கள், ஒன்பது எண்ணெய் மற்றும் சரக்கு ரயில்கள் உட்பட 36 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டன.

ஜனவரி 29 அன்று 29 பயணிகள் ரயில்கள், 15 எண்ணெய் மற்றும் சரக்கு ரயில்கள் என மொத்தம் 44 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டன. 36 பயணிகள் ரயில்கள் மற்றும் 12 எண்ணெய் மற்றும் சரக்கு ரயில்கள் உட்பட 43 ரயில் சேவைகள் நேற்று (ஜனவரி 30) இரத்து செய்யப்பட்டுள்ளன.

பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால், குறைந்த வசதிகளுடன் ரயில்களில் பயணிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !