ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள காரணத்தால் நடிகை ஜாக்குலினுக்கு துபாய் செல்ல புதுடில்லி நீதிமன்றம் அனுமதி

 

ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள காரணத்தால் நடிகை ஜாக்குலினுக்கு துபாய் செல்ல புதுடில்லி நீதிமன்றம் அனுமதி



பண மோசடியாளர்  சுகேஸ் சந்திரசேகரின் 200 கோடி ரூபாய் பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கையில் பிறந்த நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ், துபாய் செல்ல புதுடில்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஜனவரி 27 முதல் 30 வரை துபாய்க்கு மாநாட்டில் கலந்து கொள்ளவதற்காக செல்வதற்கு நீதிமன்றத்தின் அனுமதியை கோரிய ஜாக்குலின் பெர்னாண்டஸ் நேற்று பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.

இதன்போது ஜாக்குலின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, துபாயில் நடைபெறும் பெப்சிகோ மாநாட்டில் கலந்து கொள்ள நடிகை ஒப்பந்தப்படி கடமைப்பட்டிருப்பதாகவும், அவர் அதைத் தவிர்த்தால் அவர் மீது வழக்கு தொடரப்படலாம் என்றும் சுட்டிக்காட்டினார்.

அவர் சமீபத்தில் ஒஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

அவரது தொழில் வாழ்க்கையின் இந்த கட்டத்தில், இது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் தருணமாகும் என்றும் சட்டத்தரணி குறிப்பிட்டார்.

இதனையடுத்தே தொழில்ரீதியிலான கடமைகளுக்காக நடிகை ஜாக்குலினை வெளிநாடு செல்ல நீதிபதி அனுமதி அளித்தார்.

முன்னதாக 2022 நவம்பர் மாதம் பணமோசடி வழக்கில் ஜாக்குலினுக்கு வழக்கமான பிணை வழங்கப்பட்டது.

எனினும் இந்த வழக்கில் அவர் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !