சூடானில் உள்ள 18 இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேற மறுப்பு - வெளிவிவகார அமைச்சு

 

சூடானில் உள்ள 18 இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேற மறுப்பு - வெளிவிவகார அமைச்சு


சூடானில் உள்ள 18 இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேற மறுப்பு - வெளிவிவகார அமைச்சு

சூடானில் உள்ள 18 இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேற மறுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வேலை இழக்க நேரிடும் என்று கூறி, ஒரு குழு சூடானில் தங்க விருப்பம் தெரிவித்ததாக, வெளியுறவு அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.

 எவ்வாறாயினும், இதுவரையில் சூடானில் இருந்து வெளியேற விருப்பம் தெரிவித்த 34 இலங்கையர்களை வெளியேற்றுவதற்கு வெளிவிவகார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர்களில் 14 பேர் நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் மேலும் 6 பேர் சவூதி அரேபியாவின் ஜித்தாவை சென்றடைந்துள்ளதாகவும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

 மேலும் 14 இலங்கையர்கள் போர்ட் சூடானில் தங்கியுள்ளதாகவும், அவர்களை விரைவில் நாட்டுக்கு அழைத்துவர தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021