'லக்சியனே மந்திரய' : 9 மாடிகள் ; 4000 மில்லியன் ரூபா செலவு ; பல்வேறு அரச நிறுவனங்களும் ஒரே இடத்தில் ; தினமும் 3000 - 5000 பேருக்கு சேவை !

 

'லக்சியனே மந்திரய' : 9 மாடிகள் ; 4000 மில்லியன் ரூபா செலவு ; பல்வேறு அரச நிறுவனங்களும் ஒரே இடத்தில் ; தினமும் 3000 - 5000 பேருக்கு சேவை !

கம்பஹா மாவட்ட செயலக நிர்வாக வளாகமான 'லக்சியனே மந்திரய' செவ்வாய்க்கிழமை (27) மாலை 4 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் திறந்துவைக்கப்படவுள்ளது. 

1978ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கம்பஹா மாவட்ட செயலக நிர்வாக வளாகம் புகழ்பெற்ற 'அக்ரா' மாளிகையில் செயற்பட்டு வருகிறது. ஆனால், தற்போது அதன் இடப் பற்றாக்குறை காரணமாக அதனருகில் 9 தளங்கள் கொண்ட புதிய நிர்வாக வளாகம் கட்டப்பட்டுள்ளது.

இப்புதிய கட்டடத்தை கட்டுவதற்கான அடிக்கல் 2019 மார்ச் 12ஆம் திகதி நடப்பட்டது. இக்கட்டடத்தை நிர்மாணிப்பதற்கு 4000 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

இதனை திறந்துவைப்பதன் மூலம் கம்பஹா மாவட்டத்தின் பிரதான அரச நிறுவனங்கள் ஒரே இடத்துக்கு கொண்டுவரப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச நிறுவனங்களையும் ஒரே இடத்துக்கு கொண்டு வருவதன் மூலம் மக்களுக்கு அதிக வினைத்திறனான சேவையை வழங்க முடியும் என அமைச்சர் மேலும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த புதிய நிர்வாக வளாகத்தின் அளவு 2,25,000 சதுர அடியாகும். இதில் 1000 இருக்கைகள் கொண்ட நவீன கேட்போர் கூடம், 400 இருக்கைகள் கொண்ட புதிய சிற்றுண்டிச்சாலை மற்றும் புதிய வாகனத் தரிப்பிடம் ஆகியவை அடங்குகின்றன.

கம்பஹா பிரதேச செயலக அலுவலகம், மாவட்ட தொழிலாளர் அலுவலகம், மாவட்ட சமுர்த்தி அலுவலகம், பிரதி தபால்மா அதிபர் அலுவலகம், மாவட்ட திட்டமிடல் செயலக அலுவலகம், நகர அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட காரியாலயம் உள்ளிட்ட 28 பிரதான அரச நிறுவனங்கள் இந்த வளாகத்தினுள்  அமையவிருக்கின்றன.

இந்த நிறுவனங்களில் இருந்து பல்வேறு சேவைகளை பெற தினமும் 3000 - 5000 பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !