பல்கலைக்கழக மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளமை தொடர்பில் ஆய்வு

 

பல்கலைக்கழக மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளமை தொடர்பில் ஆய்வு

#Sri Lanka #Lanka4 #School Student

பல்கலைக்கழக மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளமை தொடர்பில் ஆய்வு

ஒரு வருடத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக பல செய்திகள் வந்துள்ளன. இவ்வாறானதொரு சம்பவம் நேற்று கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ளது. இதன்படி, பல்கலைக்கழக மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளமை தொடர்பில் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் கருத்துத் தெரிவித்திருந்தார்.

 பல்கலைக்கழகங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக பல நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். பல்கலைக்கழகங்களில் பொலிஸ் நிலையங்களை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்காத மாணவர்களுக்கிடையிலான தற்கொலைகள் தொடர்பில் ஒப்பீட்டு தரவு பகுப்பாய்வு நடத்தப்பட உள்ளதாக உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் மேலும் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !