திலீபனின் நினைவேந்தல் ஊர்வலம் இன நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் செயல் - ஆளுநர் செந்தில் தொண்டமான்
திலீபனின் நினைவேந்தல் ஊர்வலம் இன நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் செயல் - ஆளுநர் செந்தில் தொண்டமான்
அபு அலா -
நாட்டின் நல்லிணக்கத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆளுநர் என்ற வகையில் தனக்குள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
திலீபனின் நினைவேந்தல் ஊர்வலம் பாராளுமன்ற உறுப்பினரால் பொலிஸ் அனுமதியின்றி சிங்கள மக்கள் வசிக்கும் பிரதேசத்தை ஊடுருவிச்சென்றது. இது இனங்களுக்கிடையேயான நல்லிணக்கத்தை இல்லாமலாக்குகிறது.
தற்போது நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அதி கவனத்துடன் செயற்படக்கூடிய பொறுப்புள்ளது. அப்பொறுப்பில் அவதானக்குறைவாகச் செயற்படுவது நாட்டின் நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பதுடன், சட்ட ஒழுங்கும் பாதிப்படைகின்றது.
எதிர்காலத்தில் நாட்டின் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் எந்தச்செயற்பாட்டையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
இது குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment