கோயில் உண்டியல் திருட்டு: ஒருவர் கைது !

 

கோயில் உண்டியல் திருட்டு: ஒருவர் கைது !


யாழ்ப்பாணம், ஆவரங்கால் சிவன் கோவிலில் உண்டியலை உடைத்து திருட்டில் ஈடுபட்ட ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (26) இரவு கைது செய்யப்பட்டதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

குறித்த ஆலயத்தில் திருடிவிட்டு மற்றொரு ஆலயத்தில் திருட முற்பட்ட போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து திருடப்பட்ட பணமும் சில பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பிலான விசாரணைகளுக்கு பின்னர் சந்தேகநபரை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர் .

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,504 முப்படை வீரர்கள் கைது