கைதியின் தாக்குதலில் சிறைச்சாலை அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதி !

 

கைதியின் தாக்குதலில் சிறைச்சாலை அதிகாரிகள் வைத்தியசாலையில் அனுமதி !


போகம்பர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் நடத்திய தாக்குதலில் காயமடைந்த இரண்டு சிறைச்சாலை அதிகாரிகள் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கல்முனை மேல் நீதிமன்றில் இடம்பெறும் வழக்கொன்றுக்காகக் குறித்த சந்தேகநபர் சிறைச்சாலை அதிகாரிகளால் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி பி. திசாநாயக்க தெரிவித்தார்.

உடுதும்பர பகுதியில் வைத்து இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த இரு சிறைச்சாலை அதிகாரிகளும் உடுதும்பர ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021