சட்டவிரோத மதுபானத்துடன் இளைஞன் கைது !

 

சட்டவிரோத மதுபானத்துடன் இளைஞன் கைது !


கம்பஹா, பல்லேவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பதுராகொட பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன், இளைஞன் ஒருவர் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளதாக பல்லேவெல பொலிஸார் தெரிவித்தனர்.

பல்லேவெல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுராகொட பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 101 லீற்றர் சட்டவிரோத மதுபானம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பல்லேவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

அம்பாறையில் அப்துல் கபூர் சேதனப் பசளை மூலம் அப்பிள் செய்கை வெற்றியளிப்பு.

மாதுரு ஓயா தேசிய பூங்காவில் தோல் உரிக்கப்பட்ட சிறுத்தையின் சடலம் மீட்பு

நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையின் பவள விழா (திறந்த) போட்டிகள் - 2021