கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்டவர் மீட்பு - பாணந்துறையில் சம்பவம் !
கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்டவர் மீட்பு - பாணந்துறையில் சம்பவம் !
பாணந்துறை கடற்பரப்பில் நீராடிக்கொண்டிருந்த ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் உயிர்காப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (23) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாணந்துறை, வலான பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே கடல் நீரில் அடித்துச் செல்லப்பட்டு மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸார் அந்த நபரை மீட்டு, அடிப்படை முதலுதவிகளை வழங்கிய பின்னர், அவரை மேலதிக சிகிச்சைக்காக பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
Comments
Post a Comment