Posts

Showing posts from December, 2024

நெல் கொள்வனவிற்கு சலுகை வட்டி வீதத்தில் கடன் !

Image
  நெல் கொள்வனவிற்கு சலுகை வட்டி வீதத்தில் கடன் ! சிறு மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கு அரச வங்கிகள் ஊடாக சலுகை வட்டி வீதத்தில் அடகுக் கடன் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு... 05. இதற்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்ட நெற் கொள்வனவுக்கான அடகுக் கடன் முறை (Pledge loan Facility) 2024/2025 பெரும்போகத்திலிருந்து வருடாந்த வேலைத்திட்டமாக நடைமுறைப்படுத்தல் நெல் அறுவடைக்கான நியாயமான விலையை உறுதிப்படுத்தல் மற்றும் சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்களை பலப்படுத்தும் நோக்கில் சலுகை வட்டி வீதத்தில் அரச வங்கிகள் மூலமாக அடகுக் கடன் முறையொன்று சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்களுக்கு வழங்குவதற்காக 2023.08.14 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடந்த போகங்களில் இவ்வேலைத்திட்டம் சிறந்த பெறுபேறுகளை அடைந்துள்ளமையை அவதானிக்கக் கூடியதாகவுள்ளமையால், 2024ஃ25 பெரும்போகம் தொடக்கம் ஒவ்வொரு போகத்திலும் இவ்வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது பொருத்தமானதெனக்...

சிறைச்சாலையில் உள்ள கணவருக்கு போதைப்பொருட்களை கொண்டு சென்ற மனைவி கைது !

Image
  சிறைச்சாலையில் உள்ள கணவருக்கு போதைப்பொருட்களை கொண்டு சென்ற மனைவி கைது ! களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கணவருக்கு போதைப்பொருட்களை கொண்டு சென்றதாக கூறப்படும் மனைவி நேற்று திங்கட்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். பாணந்துறை, அலுபோமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடைய மனைவியே கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, சந்தேக நபரான மனைவி களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது கணவருக்கு கொடுப்பதற்காக உணவு பொதி ஒன்றையும், சிறை கூண்டைச் சுத்தம் செய்வதற்கு தும்புத்தடி ஒன்றையும் சிறைச்சாலைக்கு நேற்றைய தினம் கொண்டு சென்றுள்ளார். இதன்போது, சிறைச்சாலை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சந்தேக நபரான மனைவி கொண்டு சென்ற தும்புத்தடியில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ்,ஹெரோயின் மற்றும் ஹேஷ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த பெறுமதி 10 இலட்சம் ரூபா ஆகும். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட மனைவி மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை வடக்கு பொ...

மட்டக்களப்பில் கரை ஒதுங்கிய மூங்கில் படகு ; பொலிஸார் விசாரணை !

Image
  மட்டக்களப்பில் கரை ஒதுங்கிய மூங்கில் படகு ; பொலிஸார் விசாரணை ! மட்டக்களப்பு மாவட்டம் கதிரவளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பால்சேனை பிரதேசத்தில் மர்ம படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. மூங்கிலால் செய்யப்பட்ட இப்படகானது இன்று செவ்வாய்க்கிழமை (31) காலை முதல் கரை ஒதுங்கியுள்ளது. இந்நிலையில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது விசாரணைகள் கதிரவளி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். இப்படகில் வந்தவர் யார் என்பது குறித்த விசாரணையை கதிரவளி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

அரச சேவையில் ஆட்குறைப்பு செய்யப்படாது : அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ !

Image
  அரச சேவையில் ஆட்குறைப்பு செய்யப்படாது : அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ ! அரசாங்க ஊழியர்களில் குறைப்பை மேற்கொள்ள எதிர்ப்பார்க்கவில்லை என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (31) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், அரச சேவையில் மக்களை திறம்பட மற்றும் வினைத்திறனுடன் ஈடுபடுத்துவதே அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பாகும் என தெரிவித்தார். ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்களை நாட்டு மக்களுக்கு சேவைகளை வழங்கும் வகையில் ஒழுங்குபடுத்த எதிர்ப்பார்த்துள்ளதாக தெரிவித்த அமைச்சர், சுகாதார அமைச்சின் கீழ்நிலையில் உள்ள பெரும்பாலான ஆட்சேர்ப்புகள் சேவை தேவையை விட அரசியல் தேவைக்காக செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

எரிபொருளின் விலையில் இன்று திருத்தமா? வெளியான தகவல் !

Image
  எரிபொருளின் விலையில் இன்று திருத்தமா? வெளியான தகவல் ! நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருளின் விலையில் இன்று திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய, இவ்வாறு எரிபொருளின் விலையில் மாற்றங்கள் ஏற்படுத்தக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை, இறுதியாக கடந்த நவம்பர் மாதம் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 2 ரூபாவினால் குறைக்கப்பட்டிருந்தது. அத்துடன், ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டது. மேலும், மண்ணெண்ணெய்யின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதுடன், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் மற்றும் சுப்பர் டீசல் ஆகியவற்றின் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆடைத் தொழிற்சாலையொன்றை பார்வையிடச் சென்ற திசைக்காட்டி எம்.பிக்கள் இருவர் மீது தாக்குதல் !

Image
  ஆடைத் தொழிற்சாலையொன்றை பார்வையிடச் சென்ற திசைக்காட்டி எம்.பிக்கள் இருவர் மீது தாக்குதல் ! பிங்கிரியவில் உள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றை பார்வையிடச் சென்ற தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரை சுற்றி வளைத்த மக்கள் குழுவொன்று அவ்விருவர் மீதும் தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில், திங்கட்கிழமை(30) பிற்பகல் பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விஜேசிறி பஸ்நாயக்க மற்றும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான் ஆகியோர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆடைத் தொழிற்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடிவிட்டுச் செல்லவிருந்த போதே இந்தச் சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எம்.பி.க்கள் சென்ற இரு வாகனங்களையும் சுற்றிவளைத்த மக்கள், அவர்களையும் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆடைத்தொழிற்சாலையின் அதிகாரிகள் குழுவைச் சந்தித்து இருவரும் வெளியேற்ற முற்பட்ட போது, குழுவொன்று சுமார் அரை மணித்தியாலம் இருவரையும் சுற்றி வளைத்து ஆவேசமான வார்த்தைகளைக் கூறி அவர்களுக்கு எதிராக போராட்ட...

போலி நாணயத்தாளை பயன்படுத்தி மதுபானம் வாங்க முயன்றவர் கைது !

Image
  போலி நாணயத்தாளை பயன்படுத்தி மதுபானம் வாங்க முயன்றவர் கைது ! பாதுக்க நகரத்தில் உள்ள மதுபானசாலை ஒன்றில் 5000 ரூபா போலி நாணயத்தாளை பயன்படுத்தி மதுபானம் வாங்க முயன்ற சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹட்டன் பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட 36 வயதுடையவராவார். சந்தேக நபர் குறித்த மதுபானசாலைக்குச் சென்று மதுபானம் வாங்க முயன்றுள்ளார். இதன்போது சந்தேக நபரிடமிருந்த நாணயத்தாள் தொடர்பில் சந்தேகமடைந்த மதுபானசாலையின் உரிமையாளர் உடனடியாக பொலிஸாருக்க தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பாதுக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் தொடர்பான தீர்ப்பு !

Image
  புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் தொடர்பான தீர்ப்பு ! அண்மையில் நிறைவடைந்த தரம் 05க்கான புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளின் முன்கூட்டியே வௌியான மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்குவது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், வல்லுனர்கள் முன்வைத்த மூன்று பரிந்துரைகளில், பொருத்தமான பரிந்துரையை தேர்வு செய்து, உடனடியாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி, பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வினாத்தாள்கள் வெளியானதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்களான, ஐ.ஜி.எஸ். பிரேமதிலக மூன்று மில்லியன் ரூபாவையும், சமிந்த குமார இளங்கசிங்க இரண்டு மில்லியன் ரூபாவையும் அரசாங்கத்திற்கு இழப்பீடாக செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் தாக்கல் செய்த நான்கு அடிப்படை உரிமை மனுக்களை விசாரணை செய்த யசந்த கோதாகொட, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த தீர...

ரின் மீன் மீதான VAT வரியை குறைக்குமாறு கோரிக்கை !

Image
  ரின் மீன் மீதான VAT வரியை குறைக்குமாறு கோரிக்கை ! ரின் மீன் மீது விதிக்கப்பட்டுள்ள VAT வரியை குறைக்குமாறு இலங்கை ரின் மீன் உற்பத்தியாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. ரின் மீன்களுக்கு கட்டுப்பாட்டு விலையை விதிப்பது பிரச்சினை இல்லையென்றாலும், அவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள VAT வரியை குறைக்க அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சங்கத்தின் தலைவர் ஷிரான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். VAT வரி குறைக்கப்படாவிட்டால் அதன் விளைவை மீனவர்கள் அனுபவிக்க நேரிடும் என ஷிரான் பெர்னாண்டோ கூறுகிறார். இதேவேளை, அனைத்து தரப்பினருடனும் இணக்கம் காணப்பட்டதன் பின்னரே ரின் மீன்களுக்கான கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரகோன் தெரிவித்தார்.

இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனல் மீது சைபர் தாக்குதல் !

Image
  இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனல் மீது சைபர் தாக்குதல் ! இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனல் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. தப்போது அதன் கட்டுப்பாடு தமது நிர்வாகிகளிடமிருந்து முற்றிலும் நழுவிவிடப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது. இதனை விரைவில் மீட்டெடுக்க தேவையான பணிகளை தற்போது மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் தனது முகநூல் பக்கத்தில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இன்று நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை !

Image
  இன்று நாட்டின் பல பகுதிகளில் பலத்த மழை ! இன்றிலிருந்து (30ஆம் திகதி) அடுத்த சில நாட்களில் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை நிலைமை சற்று அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் 50 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-35 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்ப...

தமிழ்த்தேசியத்தை அழிக்கும் பணிகளை செய்யாதே ; தமிழரசின் மத்திய குழுகூட்டம் இடம்பெறும் விடுதி வாயிலில் காட்சியளித்த பதாதை !

Image
  தமிழ்த்தேசியத்தை அழிக்கும் பணிகளை செய்யாதே ; தமிழரசின் மத்திய குழுகூட்டம் இடம்பெறும் விடுதி வாயிலில் காட்சியளித்த பதாதை ! வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டம் இடம்பெறும் தனியார்விருந்தினர் விடுதிக்கு முன்பாக கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களால் பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று சனிக்கிழமை (28) காலை 10 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றுவருகின்றது. இந்நிலையில் கட்சியின் மத்தியகுழு கரிசனையில் எடுக்கவேண்டும் என்று கோரி கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களால் பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன், கூட்டத்திற்கு வருகைதரும் மத்தியகுழு உறுப்பினர்களை அந்த பதாகையினை வாசித்துவிட்டு செல்லுமாறு பொதுச்சபை உறுப்பினர்களால் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது. குறித்த பதாகையில் நீதிமன்ற வழக்குகளை மீளப்பெறு,பொதுச்சபையை உடனடியாக கூட்டு,யாப்பின்படி தலைவர் உட்பட யாரையும் வெளியேற்றும் அதிகாரம் மத்தியகுழுவிற்கு இல்லை என்பதை ஏற்றுக்கொள், 2019 இல் பொதுச்சபையால் நியமிக்கப...

மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்தில் பெண்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் சந்தை இனந்தெரியாதவர்களால் தீக்கிரை !

Image
  மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்தில் பெண்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் சந்தை இனந்தெரியாதவர்களால் தீக்கிரை ! மட்டக்களப்பு கல்லடி பழைய பாலத்தில் பெண்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் சந்தை நேற்று வெள்ளிக்கிழமை (27) இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு மாவட்டத்தில் நஞ்சற்ற உணவு வகைகளை விற்பனை செய்யும் ஒரு சந்தையாக Bridge Market காணப்பட்டது. சுமார் 12 வருடங்களாக 30 பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் தமது வாழ்வாதாரத்திற்காக நாளாந்தம் மரக்கறி, அரிசி, அரிசி மா, தேன், நெய், கருவாடு போன்ற மேலும் பல உள்ளூர் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்து தமது வாழ்வாதாரத்தை ஈட்டி வந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வழமைபோன்று காலை 7 மணி முதல் பி.ப 2 மணி வரை வியாபார நடவடிக்கையில் இவர்கள் ஈடுபடுவதுடன், அதனைத் தொடர்ந்து பிற்பகல் வேளையில் குறித்த பகுதியில் மரக்கறி, பழவகை போன்ற பொருட்களை வியாபாரிகள் வியாபாரம் செய்து வந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் நேற்று நள்ளிரவு சந்தேகத்தின் பேரில் மனநலம் ப...

மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் கருத்து தெரிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம் !

Image
  மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் கருத்து தெரிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம் ! மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை நேற்று வெள்ளிக்கிழமை (27) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2025 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்கு மின் கட்டணத்தில் எந்தவித திருத்தங்களையும் மேற்கொள்ளாமல் இருத்தல் வேண்டும் என இலங்கை மின்சார சபை பரிந்துரைத்திருந்தது. இது தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, கருத்து தெரிவிக்கையில், மின்சாரக் கட்டணத்தை 10 முதல் 20 வீதம் வரை குறைப்பதற்கு சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரிவித்திருந்தது. எனவே, மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் 0772 943 193 என்ற தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ள முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் விலை விரைவில் குறைப்பு !

Image
  அத்தியாவசிய பொருட்களின் விலை விரைவில் குறைப்பு ! அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலைகளை இவ் வாரம் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இறக்குமதியாளர் மற்றும் உற்பத்தியாளர்களுடன் கடந்த 24 ஆம் திகதி கலந்துரையாடியதுடன் அத்தியாவசியப் பொருட்களை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். சந்தையில் தற்போது டின் மீன் 425 ரூபா முதல் 490 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. எனினும் அதனை உள்ளூர் உற்பத்தியாளர்கள் 300 ரூபா என தெரிவிப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்படி, இவ் வாரம் டின் மீன்கள் உள்ளிட்ட சில பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படுமென அமைச்சர் கூறினார்.

அஞ்சலி செலுத்தினர் சுனாமி பேபி அபிலாஷ் !

Image
  அஞ்சலி செலுத்தினர் சுனாமி பேபி அபிலாஷ் ! சுனாமி பேபி அபிலாஷ், அவரது இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூவிக்கு முன்பாக அஞ்சலியும் செலுத்தினார். சுனாமி பேபி அபிலாஷ் அவரது இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூவிக்கு முன்பாக ஆழிப்பேரலையால் உயிர் நீத்த உறவுகளுக்காக தனது அஞ்சலியை வியாழக்கிழமை(26) செலுத்தினார். சுனாமி பேபி என்றழைக்கப்படும் இந்த ஜெய ராசா அபிலாஷ் யார்? கடந்த 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையின்போது 2004.12.26 அன்று கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை அல்லோல கல்லோலபட்டது. இரண்டு மாதம் ஒருவாரமும் நிறைந்த குழந்தையாக சுனாமி பேபி 81 எனும் பெயருடன் உலகம் முழுவதும் பேசும் குழந்தையாக மாறினான் இந்த ஜெயராசா அபிலாஷ். இந்த குழந்தை தங்களுடையது எனது 09 தாய்மார்கள் போராடினர். பின்னர் அங்கு ஏற்பட்ட குழப்ப நிலையால் வைத்தியசாலை நிர்வாகம் கல்முனை நீதவான் நீதிமன்றத்தை நாடியது. ஒன்பது தாய்மார்களையும் மரபணு பரிசோதனை செய்ய நீதவான் உத்தரவிட்டார். பின்னர் 52 நாட்களின் பின்னர் ஜெயராசா யுனித்தலா தம்பதியினர் களின் புதல்வனே அபிலாஷ் என நிரூபணமாகியது. பின்னர் அந்த குழந்தை ஜெயராசா யுனித்த...

அரிசி இறக்குமதிக்கான தடை இன்று முதல் நீக்கம் !

Image
  அரிசி இறக்குமதிக்கான தடை இன்று முதல் நீக்கம் ! இடைநிறுத்தப்பட்டிருந்த அரிசி இறக்குமதிக்கான அனுமதி இன்று (26) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மோசமான வானிலையால் நாட்டில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக கடந்த டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையில் தனியார் துறை வர்த்தகர்களுக்கு நேரடியாக அரிசியை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அக்காலப் பகுதியில் மொத்தமாக 67,000 மெற்றிக் தொன் அரிசியை இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. எவ்வாறெனினும், அண்மையில் நடைபெற்ற அமைச்சரவையில் அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் ஜனவரி 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டதுடன், அதற்கான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 24 ஆம் திகதி வெளியிடப்பட்டது. இதன்படி, இன்று முதல் அரிசி இறக்குமதிக்கான தடை நீக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, அரச வர்த்தக பல்வேறு சட்டமூலக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக அரசாங்கத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட 780 மெற்றிக் தொன் அரிசியின் முதலாவது தொகுதி நேற்று (25) இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ள...

பொலிஸ் இடமாற்ற உத்தரவுகளை அமுல்படுத்தும் திகதி நீடிப்பு !

Image
  பொலிஸ் இடமாற்ற உத்தரவுகளை அமுல்படுத்தும் திகதி நீடிப்பு ! நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்ற உத்தரவு நீடிப்பது தொடர்பில் இலங்கை பொலிஸ் தலைமையகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு தொடர்பான பொலிஸ் திணைக்களத்தின் வருடாந்த இடமாற்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவது ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இது தொடர்பான உத்தரவினை பிறப்பித்துள்ளார். இதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி நடைமுறைப்படுத்தப்படவுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்ற உத்தரவுகளை அமுல்படுத்தும் திகதி அவ்வருடம் ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், கடமைத் தேவைகளின் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த உத்தரவு தடையாக இருக்காது என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

நத்தார் களியாட்ட நிகழ்வில் தகராறு ; 3 பெண்கள் உட்பட 08 பேர் வைத்தியசாலையில் !

Image
  நத்தார் களியாட்ட நிகழ்வில் தகராறு ; 3 பெண்கள் உட்பட 08 பேர் வைத்தியசாலையில் ! நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த களியாட்ட நிகழ்வொன்றில் இருவருக்கிடையில் ஏற்பட்ட தகராறில் 03 பெண்கள் உட்பட எட்டு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (25) இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, அம்பலாங்கொடை, ஹெரியாவல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் நத்தார் பண்டிகையை முன்னிட்டு களியாட்ட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது, களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட நபர்கள் சிலர் அயல் வீட்டில் உள்ள நபர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு எல்லை மீறியதில் அயல் வீட்டில் உள்ள நபர்கள் சிலர் களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட நபர்களை இரும்பு கம்பி மற்றும் பொல்லால் தாக்கியுள்ளனர். இதனையடுத்து, காயமடைந்தவர்கள் வேதர மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் மூவர் மேலதிக சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் த...

ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் பதவியில் ஏற்படவுள்ள மாற்றம் !

Image
  ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் பதவியில் ஏற்படவுள்ள மாற்றம் ! எதிர்வரும் ஜனவரி 01 ஆம் திகதி முதல் ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் பதவிக்கு இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரி சாமிந்த ஹெட்டியாராச்சி நியமிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது இவர் திருகோணமலை மாவட்ட செயலாளராக பணியாற்றி வருகிறார். ஓய்வூதியப் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றும் ஜெகத் டி.டயஸ் 2024.12.31 அன்று ஓய்வுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது .

வீட்டில் வளர்க்கும் நாய்க்கு கொடுத்த உணவு கெட்டுப்போனதால் தாயை தள்ளி விட்ட மகன் ; தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு !

Image
  வீட்டில் வளர்க்கும் நாய்க்கு கொடுத்த உணவு கெட்டுப்போனதால் தாயை தள்ளி விட்ட மகன் ; தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு ! வீட்டில் வளர்க்கும் நாய்க்கு கொடுத்த உணவு கெட்டுப்போனதால் தாயாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது மகன், தாயை தள்ளிவிட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தாய், திங்கட்கிழமை (23) உயிரிழந்துள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர். ராகம வல்பொல பிரதேசத்தைச் சேர்ந்த தீபா மாலா குமாரி விஜேசிங்க (வயது 57) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் அந்த தாயின் மகன் (24) சந்தேகத்தில் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக ராகம பொலிஸார் தெரிவித்தனர். வீட்டில் வளர்க்கப்படும் நாய்க்கு கடந்த (20) ஆம் திகதி கொடுக்கப்பட்ட உணவு கெட்டுப்போனது தொடர்பில் தாய்க்கும் மகனுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து தாயை மகன் தள்ளிவிட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. படுகாயமடைந்த தாய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திங்கட்கிழமை (23) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் தள்ளியதால் கீழே விழுந்த காரணமாக ...

அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் சமமான சலுகைகளை வழங்க வேண்டும் ; ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை !

Image
  அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் சமமான சலுகைகளை வழங்க வேண்டும் ; ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை ! பாடசாலை உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கு, தற்போதைய அரசாங்கம் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் சமமான சலுகைகளை வழங்க வேண்டுமென ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. அஸ்வெசும பயனாளிகளின் பிள்ளைகளுக்கும், அஸ்வெசும கொடுப்பனவு தேவையுடையோரின் பிள்ளைகளுக்கும் 6,000 ரூபா உதவித்தொகை வழங்குவதைப்போன்று, அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் அரசாங்கம் சலுகைகளை வழங்க வேண்டுமென அந்த சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. அதன்படி, அனைத்து மாணவர்களுக்கும் அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டுமென அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மாணவர் தொகைக்கேற்ப வரி குறைக்கப்பட்டு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டதொரு குழுவிற்கு மாத்திரம் 6,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படுவது பாரிய பிரச்சினையாகும் என்றும் கூறியுள்ளார்இந்த சலுகைகள் அனைத்து மாணவர்களுக்கும் சமமாக வழங்கப்பட வேண்டும் என அகில இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதேவேளை, அரசாங்கத்...

அர்ச்சுனா எம்.பி தெரிவித்த குற்றச்சாட்டு பொய்யானது !

Image
  அர்ச்சுனா எம்.பி தெரிவித்த குற்றச்சாட்டு பொய்யானது ! யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில், பதில் அத்தியட்சகராக கடமையாற்றிய தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அவசர மருத்துவ அலகு கட்டடம் அமைக்க 400 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில், 200 மில்லியன் ரூபா நிதியே பயன்படுத்தப்பட்டதாகவும் மிகுதிப் பணம் ஊழல் செய்யப்பட்டதாகவும் பொதுவெளியில் குற்றஞ்சாட்டியிருந்தார். இது தொடர்பான உண்மை தன்மையை அறிந்துகொள்ள, பசுந்தேசம் அமைப்பு தகவல் அறியும் சட்டம் ஊடாக யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையிடம் விளக்கம் கோரியிருந்த நிலையில் அதற்கான பதில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தகவல் அறியும் சட்டம் ஊடாக பசுந்தேசம் அமைப்பு கோரிய விளக்கத்துக்கு அளிக்கப்பட்டுள்ள பதில் பின்வருமாறு, 1. சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் அவசர மருத்துவ அலகு கட்டிடம் அமைக்க 400மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படவில்லை. 2. சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் அவசர மருத்துவ அலகு கட்டிடம் அமைக்க SHDP (இரண்டாவது) என்கின்ற ஐந்தாண்டு திட்டத்தில் தான் கட்டுமாண வேலைகள் நடைபெற்றன. அதனால் இதற்கெ...

பொலிஸ் கான்ஸ்டபிளை மதுபான போத்தலால் தாக்கிய சாரதி கைது !

Image
  பொலிஸ் கான்ஸ்டபிளை மதுபான போத்தலால் தாக்கிய சாரதி கைது ! விடுதி ஒன்றில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது மதுபான போத்தலை உடைத்து கான்ஸ்டபிள் ஒருவரை தாக்கிய முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக ஹொரண பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் மொரகஹஹேன பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே காயமடைந்து ஹொரண வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் புதன்கிழமை (18) அன்று கடமை இடைவேளையை அறிவித்துவிட்டு ஹொரண விடுதிக்கு மது அருந்துவதற்காக வந்துள்ளதுடன் அங்கு மேற்படி சந்தேக நபருடன் ஏதோ ஒரு சம்பவம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து குறித்த தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் ஹொரண பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வீட்டின் கதவை உடைத்து 33 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பொருட்கள் திருட்டு : சந்தேக நபர் கைது !

Image
  வீட்டின் கதவை உடைத்து 33 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பொருட்கள் திருட்டு : சந்தேக நபர் கைது ! கேகாலை பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் கதவை உடைத்து 33 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பொருட்களை திருடிச் சென்றதாக கூறப்படும் சந்தேக நபரொருவர் பொறள்ளை பிரதேசத்தில் வைத்து நேற்று புதன்கிழமை (18) கைது செய்யப்பட்டுள்ளதாக பொறள்ளை பொலிஸார் தெரிவித்தனர். பொறள்ளை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 15 ஆயிரம் ரூபா பணம், தங்க மோதிரம் , தங்க வளையல்கள் , தங்க மாலை , கையடக்கத் தொலைபேசிகள் , மடிக்கணினி மற்றும் பல்வேறு தங்க நகைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடந்த 14 ஆம் திகதி கேகாலை பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் கதவை உடைத்து 33 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பொருட்களை திருடியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொறள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி !

Image
  உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி ! 2025 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் அதிகபட்சமாக 30,000 மெட்ரிக் தொன்களுக்கு உட்பட்டு பதனிடப்படாத அயடின் சேர்க்கப்படாத உப்பை இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கையின் உப்பு உற்பத்தி நாட்டின் வீட்டுத் தேவைகளுக்கும் மற்றும் கைத்தொழில் தேவைகளுக்கும் நிலவும் கேள்வியைப் பூர்த்தி செய்வதற்காக போதுமானதாக அமைவதுடன், உப்பு விளைச்சல் குறிப்பாக காலநிலையில் தங்கியுள்ளது. நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக 2025 ஆண்டின் முதலாம்காலாண்டில் உள்நாட்டு சந்தையில் வீட்டுத் தேவைகளுக்கும் மற்றும் கைத்தொழில் தேவைகளுக்கான உப்பு விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்படலாமென அவதானிக்கப்பட்டுள்ளது. அதற்குத் தீர்வாக தயார் செய்து சந்தைக்கு விநியோகிப்பதற்கான தீர்வை வரி வீதத்திற்கமைய பதனிடப்படாத அயடின் சேர்க்கப்படாத 30,000 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு உப்பு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். அதற்கமைய, பதனிடப்படாத அயடின் சேர்க்கப்படாத 30,000 மெட்ரிக் தொன் உச்ச அளவுக்கு உட்பட்ட உப்பை 2025-01...