பொலிஸ் கான்ஸ்டபிளை மதுபான போத்தலால் தாக்கிய சாரதி கைது !
பொலிஸ் கான்ஸ்டபிளை மதுபான போத்தலால் தாக்கிய சாரதி கைது !
சம்பவத்தில் மொரகஹஹேன பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே காயமடைந்து ஹொரண வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் புதன்கிழமை (18) அன்று கடமை இடைவேளையை அறிவித்துவிட்டு ஹொரண விடுதிக்கு மது அருந்துவதற்காக வந்துள்ளதுடன் அங்கு மேற்படி சந்தேக நபருடன் ஏதோ ஒரு சம்பவம் தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து குறித்த தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஹொரண பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Comments
Post a Comment