ஓட்டமாவடியில் ரயிலில் மோதி நபரொருவர் படுகாயம் !

 

ஓட்டமாவடியில் ரயிலில் மோதி நபரொருவர் படுகாயம் !


புகையிரத வண்டியில் மோதி நபர் ஒருவர் காயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் ஓட்டமாவடி பகுதியில் புதன்கிழமை (22) காலை இடம்பெற்றுள்ளது.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த புகையிரதம் ஓட்டமாவடி பகுதியால் செல்லும் போது நபர் ஒருவர் புகையிரத பாதையை கடக்கும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதில், காயமடைந்தவர் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த மௌலவி ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காயமடைந்த நபர் சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இட மாற்றப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !