மறு நுழைவு விசாவின் செல்லுபடிக் காலத்தை நீடித்தது இஸ்ரேல்

 

மறு நுழைவு விசாவின் செல்லுபடிக் காலத்தை நீடித்தது இஸ்ரேல்



இஸ்ரேலுக்குத் திரும்பும் எதிர்பார்ப்புடன் மறு நுழைவு விசாவில் இலங்கைக்கு வருகைதந்தோரின் மறு நுழைவு விசா செல்லுபடியாகும் காலத்தை எதிர்வரும் ஜுலை மாதம் 31 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு இஸ்ரேல் மக்கள் தொகை மற்றும் குடிவரவு அதிகாரசபை தீர்மானித்துள்ளது.

மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் ஸ்திரமற்ற சூழ்நிலை காரணமாகவே இஸ்ரேல் மக்கள் தொகை மற்றும் குடிவரவு அதிகாரசபையினால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இஸ்ரேலில் இருந்து மறு நுழைவு விசாவில் இலங்கைக்கு வருகைதந்தவர்கள், மறு நுழைவு விசா காலாவதியான பின்னரும் எதிர்வரும் ஜுலை மாதம் 31 ஆம் திகதி வரையான நீடிக்கப்பட்ட காலப்பகுதியில் இஸ்ரேலுக்குத் திரும்புவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

அறுகம்பே பகுதிக்கு பலத்த பாதுகாப்பு : 500 பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகள் !

தாமரைக் கோபுரத்தில் இருந்து கீழே வீழ்ந்து மாணவி உயிரிழப்பு !

கல்முனையிலிருந்து நுவரெலியா சென்ற வேன் விபத்து குறித்து வௌியான தகவல் !